Don't Miss!
- News லோக்சபா 2ம் கட்ட தேர்தல்: 13 மாநிலம் 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு.. முக்கிய வேட்பாளர்கள் லிஸ்ட்
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தனக்கு பிடித்த சிவப்பு நிற காஞ்சிப்பட்டுப் புடவையில் இறுதி ஊர்வலம் சென்ற ஸ்ரீதேவி
மும்பை: இறுதி ஊர்வலத்தின்போது ஸ்ரீதேவிக்கு சிவப்பு நிற காஞ்சிப்பட்டுப் புடவை அணிவிக்கப்பட்டிருந்தது.
உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி அங்கு உயிர் இழந்தார். இதையடுத்து அவரின் உடல் நேற்றிரவு மும்பை கொண்டு வரப்பட்டது.
மும்பையில் உள்ள செலபிரேஷன்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
ரசிகர்கள்
ஸ்போர்ட்ஸ் கிளப்பில் வைக்கப்பட்ட ஸ்ரீதேவியின் உடலுக்கு ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென், ஹேமமாலினி, கஜோல், அஜய் தேவ்கன் உள்ளிட்ட ஏராளமான பாலிவுட் பிரபலங்களும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தினர்.
தேசியக் கொடி
ஸ்ரீதேவியின் உடல் மீது தேசியக் கொடியை போர்த்தி மகாராஷ்டிரா அரசு மரியாதை செய்தது. அவருக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கு நடந்தது.
பட்டு
என்ன தான் டிசைனர் உடைகள் அணிந்தாலும் ஸ்ரீதேவிக்கு சிவப்பு நிற காஞ்சி பட்டுப்புடவை தான் பிடிக்குமாம். அதனால் அந்த புடவையையே அவர் மீது போர்த்தியிருந்தனர். மேலும் அவர் வழக்கமாக வெளியே வருவது போன்று ஃபுல் மேக்கப்பும் போடப்பட்டிருந்தது.
|
மக்கள்
ஸ்ரீதேவியின் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்த்துவிட மக்கள் சாலையோரங்களில் கூடினர். ஆனால் அவரின் முகம் வெளியே தெரியாதபடி வாகனத்தில் அவரின் உடலை வைத்திருந்தனர்.
ஜான்வி
இறுதி ஊர்வலம் சென்ற வாகனத்தை பூக்களால் அலங்கரித்திருந்தனர். அந்த வாகனத்தில் போனி கபூர், அர்ஜுன் கபூர், ஜான்வி, மோஹித் மர்வா உள்ளிட்டோர் இருந்தனர்.