twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தனக்கு தான் கிடைக்கவில்லை மகள்களுக்காவது கிடைக்கணும்னு ஆசைப்பட்ட ஸ்ரீதேவி

    By Siva
    |

    Recommended Video

    அம்மா வேணும்: கதறும் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி- வீடியோ

    சென்னை: ஸ்ரீதேவிக்கு ஒரேயொரு மனக்குறை இருந்துள்ளது.

    நாத்தனார் மகனான மோஹித் மர்வாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற ஸ்ரீதேவி சனிக்கிழமை இரவு உயிர் இழந்தார். மதுபோதையில் குளியல் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தது தடயவியல் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

    ஸ்ரீதேவியின் செல்போன் ரெக்கார்டுகளை துபாய் போலீசார் சரிபார்த்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நடிப்பு

    நடிப்பு

    கவலை இன்றி ஜாலியாக விளையாடிக் கொண்டிருக்க வேண்டிய வயதில் நான் நடிக்க வந்துவிட்டேன். 4 வயதில் பள்ளிக்கு செல்லாமல் படப்பிடிப்புக்கு சென்றேன் என முன்பு ஸ்ரீதேவி தெரிவித்திருந்தார்.

    ஏக்கம்

    ஏக்கம்

    பிற குழந்தைகளை போன்று சாதாரண வாழ்க்கை வாழும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. சிறு வயதில் இருந்தே நடிப்பு நடிப்பு என்று பிசியாக இருந்துவிட்டேன் என்று ஸ்ரீதேவி கூறினார்.

    முடியவில்லை

    முடியவில்லை

    4 வயதிலேயே நடிக்க வந்துவிட்டதால் படிக்க முடியாமல் போனது. பள்ளி, கல்லூரிக்கு சென்று பிறரை போன்று படிக்க முடியவில்லை. குழந்தை நட்சத்திரமாக இருந்த நான் நேராக ஹீரோயின் ஆகிவிட்டேன் என்றார் ஸ்ரீதேவி.

    படிப்பு

    படிப்பு

    ஒன்றை பெற ஒன்றை இழக்க வேண்டும். வாழ்க்கையில் அனைத்தையும் பெற முடியாது. எனக்கு கிடைத்ததை வைத்து மகிழ்ச்சியாக உள்ளேன். எனக்கு கிடைக்காத கல்வி என் மகள்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்கிறேன் என்றார் ஸ்ரீதேவி. படிக்க முடியாமல் போனதே என்ற ஏக்கம் இருந்துள்ளது.

    English summary
    Actress Sridevi felt bad that she couldn't go to school and college like others as she started acting at the age of four. She decided to educate her daughters well.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X