Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சிக்கல் தீர்ந்தது: ஸ்ரீதேவியின் உடல் இன்று இரவு இந்தியா வருகிறது
Recommended Video
துபாய்: ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு வருவதில் இருந்த சிக்கல் தீர்ந்துள்ளது.
திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற ஸ்ரீதேவி மதுபோதையில் குளியல் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிர் இழந்தார். அவரது மரணத்தில் துபாய் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இந்நிலையில் ஸ்ரீதேவியின் உடலை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்க துபாய் பப்ளிக் பிராசிகியூஷன் கிளியரன்ஸ் சான்று வழங்க மறுத்தது.
ஸ்ரீதேவி
ஸ்ரீதேவியின் தலையில் பலத்த காயம் இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே ஸ்ரீதேவியின் உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைக்க தேவையான கிளியரன்ஸ் கிடைத்துள்ளது.
உடல்
ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு வருவதில் இருந்த சிக்கல் தீர்ந்துள்ளது. இந்நிலையில் போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூர் துபாய் சென்றுள்ளார்.
அர்ஜுன்
மாற்றாந்தாயான ஸ்ரீதேவியை பிடிக்காவிட்டாலும் தந்தை போனி கபூருக்கு ஆதரவாக இருக்க துபாய் சென்றுள்ளார் அர்ஜுன் கபூர். ஸ்ரீதேவியின் உடல் எம்பாமிங் செய்யப்பட்ட பிறகு தனி விமானம் மூலம் இன்று இந்தியா கொண்டு வரப்படுகிறது.
மும்பை
மும்பையில் உள்ள ஸ்ரீதேவியின் வீட்டிற்கு முன்பு ரசிகர்கள் கூடியுள்ளனர். ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கு நாளை மும்பையில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.