மறைவுக்கு முன்பு ஸ்ரீதேவி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இவை தான்
Recommended Video

துபாய்: நடிகை ஸ்ரீதேவி இறக்கும் முன்பு கடைசியாக எடுத்த புகைப்படங்கள் ரசிகர்களை கண்ணீர் சிந்த வைத்துள்ளது.
நடிகை ஸ்ரீதேவி தனது நாத்தனார் மகனான மோஹித் மர்வாவின் திருமணத்தில் கலந்து கொள்ள கணவர் போனி கபூர், இளைய மகள் குஷியுடன் துபாய் சென்றார்.
இந்நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

புகைப்படங்கள்
திருமண நிகழ்ச்சியின்போது ஸ்ரீதேவி தனது மகள் மற்றும் குடும்பத்தாருடன் சேர்ந்து சந்தோஷமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

குஷி
இளைய மகள் குஷி கபூரும், ஸ்ரீதேவியும் டிசைனர் உடை அணிந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர். அதில் ஸ்ரீதேவி குஷிக்கு அக்கா போன்று இருக்கிறார்.

கணவர்
ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூர், குஷி ஆகியோருடன் சேர்ந்து மணமக்களுடன் புகைப்படத்திற்கு சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை தற்போது பார்த்து ரசிகர்கள் கண்ணீர் சிந்துகிறார்கள்.

மகிழ்ச்சி
மோஹித் மர்வா திருமணத்தின்போது எடுத்த புகைப்படங்கள் தான் ஸ்ரீதேவி கடைசியாக எடுத்துக் கொண்டவை. ஸ்ரீதேவி உயிருடன் இல்லை என்பதை நம்பவே முடியாமல் பாலிவுட் பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











