துபாய்க்கு கிளம்பியபோதே ஸ்ரீதேவிக்கு உடம்புக்கு சரியில்லை: தோழி பேட்டி
Recommended Video

மும்பை: துபாய்க்கு கிளம்பியபோது ஸ்ரீதேவி உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததாக அவரின் நெருங்கிய தோழி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாத்தனார் மகன் மோஹித் மர்வாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற ஸ்ரீதேவி குடிபோதையில் குளியல் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிர் இழந்தார்.
இந்நிலையில் இது குறித்து அவரின் நெருங்கிய தோழி ஒருவர் பேட்டி அளித்துள்ளார்.

ஸ்ரீதேவி
துபாய் கிளம்பும்போது ஸ்ரீதேவிக்கு உடல்நலம் சரியில்லை. மருந்து மாத்திரை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இருந்தாலும் அந்த திருமணத்தில் கலந்து கொள்ள விரும்பினார் என தோழி தெரிவித்துள்ளார்.

திருமணம்
ஸ்ரீதேவி துபாய்க்கு கிளம்பிய அன்று எனக்கு போன் செய்து பேசினார். அவருக்கு காய்ச்சல் இருப்பதாகவும், ஆன்டிபயாடிக்ஸ் எடுப்பதாகவும் தெரிவித்தார் என்கிறார் அந்த தோழி.

முக்கியம்
தனக்கு உடல்நலம் சரியில்லாவிட்டாலும் அதை காரணம் காட்டி குடும்ப நிகழ்ச்சியை அவர் தவிர்க்க விரும்பவில்லையாம். காய்ச்சலோடு துபாய் சென்ற ஸ்ரீதேவி சவப்பெட்டியில் மும்பை திரும்பியுள்ளார்.

ரசிகர்கள்
திடீர் என்று மரணம் அடைந்த ஸ்ரீதேவிக்கு பாலிவுட் பிரபலங்களும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அவருக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்குக்கு மகாராஷ்டிரா அரசு ஏற்பாடு செய்தது.


Click it and Unblock the Notifications











