Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
துபாய்க்கு கிளம்பியபோதே ஸ்ரீதேவிக்கு உடம்புக்கு சரியில்லை: தோழி பேட்டி
Recommended Video
மும்பை: துபாய்க்கு கிளம்பியபோது ஸ்ரீதேவி உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததாக அவரின் நெருங்கிய தோழி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாத்தனார் மகன் மோஹித் மர்வாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற ஸ்ரீதேவி குடிபோதையில் குளியல் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிர் இழந்தார்.
இந்நிலையில் இது குறித்து அவரின் நெருங்கிய தோழி ஒருவர் பேட்டி அளித்துள்ளார்.
ஸ்ரீதேவி
துபாய் கிளம்பும்போது ஸ்ரீதேவிக்கு உடல்நலம் சரியில்லை. மருந்து மாத்திரை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இருந்தாலும் அந்த திருமணத்தில் கலந்து கொள்ள விரும்பினார் என தோழி தெரிவித்துள்ளார்.
திருமணம்
ஸ்ரீதேவி துபாய்க்கு கிளம்பிய அன்று எனக்கு போன் செய்து பேசினார். அவருக்கு காய்ச்சல் இருப்பதாகவும், ஆன்டிபயாடிக்ஸ் எடுப்பதாகவும் தெரிவித்தார் என்கிறார் அந்த தோழி.
முக்கியம்
தனக்கு உடல்நலம் சரியில்லாவிட்டாலும் அதை காரணம் காட்டி குடும்ப நிகழ்ச்சியை அவர் தவிர்க்க விரும்பவில்லையாம். காய்ச்சலோடு துபாய் சென்ற ஸ்ரீதேவி சவப்பெட்டியில் மும்பை திரும்பியுள்ளார்.
ரசிகர்கள்
திடீர் என்று மரணம் அடைந்த ஸ்ரீதேவிக்கு பாலிவுட் பிரபலங்களும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அவருக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்குக்கு மகாராஷ்டிரா அரசு ஏற்பாடு செய்தது.