Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
முதல் மனைவியுடன் பிக்னிக் சென்ற போனி கபூர்: லெஃப் அன்ட் ரைட் வாங்கிய ஸ்ரீதேவி
Recommended Video
மும்பை: முதல் மனைவி மற்றும் குழந்தைகளை சந்தித்த போனி கபூரை ஸ்ரீதேவி திட்டித் தீர்த்தாராம். மேலும் போனி தன்னை விட்டு சென்றுவிடுவாரோ என்ற பயத்திலும் இருந்தாராம்.
பாலிவுட் பட தயாரிப்பாளர் போனி கபூர் மோனா என்ற பெண்ணை திருமணம் செய்து அர்ஜுன், அன்சுலா என்ற 2 குழந்தைகளுக்கு தந்தையான பிறகு அவர் நடிகை ஸ்ரீதேவியை காதலித்தார்.
ஏற்கனவே திருமணமான போனி கபூரை ஸ்ரீதேவி மணந்தார்.
திருமணம்
போனி கபூர் ஸ்ரீதேவியை ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இது ஸ்ரீதேவிக்கு பிடிக்கவில்லை. சட்டப்படி பார்த்தால் மோனா தான் மனைவி, தான் வெறும் .... என்று வருத்தப்பட்டுள்ளார்.
பயம்
பிரபல பத்திரிகை வெளியிட்ட செய்தியின்படி ஸ்ரீதேவிக்கு தனக்கு திருமணம் நடந்த முறை பிடிக்கவில்லையாம். ஸ்ரீதேவியை மணந்த பிறகு போனி தனது முதல் மனைவி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு சுற்றுலா சென்றுள்ளார்.
திட்டு
போனி தனது முதல் மனைவி, குழந்தைகளுடன் வெளியே சென்று வந்ததை பார்த்த ஸ்ரீதேவி அவரை கோபத்தில் திட்டியுள்ளார். உங்களுக்கு அவர்களை தான் ரொம்ப பிடிக்கும் என்றால் அங்கேயே போய்விட வேண்டியது தானே என்று தெரிவித்துள்ளார்.
கவனம்
போனி கபூர் தனது முதல் மனைவியை சந்திக்காதபடி பார்த்துக் கொண்டுள்ளார் ஸ்ரீதேவி. போனிக்கு பிள்ளைகள் அர்ஜுன், அன்சுலா என்றால் உயிர். ஆனால் அவர்களை கூட பார்க்க போனியை அனுமதிக்கவில்லையாம் ஸ்ரீதேவி.
போனி
தனது திருமணம் சட்டப்படி நடக்கவில்லை என்பதால் ஸ்ரீதேவி ஒருவித பயத்திலேயே இருந்துள்ளார். மேலும் போனி தன்னை விட்டுவிட்டு சென்றுவிடுவாரோ என்றும் பயந்தாராம்.