Don't Miss!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- News அதிகாலையே "திக்" பதிலடி.. ஈரான் மீது சரமாரியாக ஏவுகணை அட்டாக் செய்த இஸ்ரேல்.. உலகப்போர் வருது?
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வந்தனாவை வெளியேற்றுக:ஸ்ரீகாந்த் மீண்டும் புகார்!
சென்னை:தங்களது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ள வந்தனாவை வெளியேற்றக் கோரி காவல்துறை ஆணையரிடம் நடிகர் ஸ்ரீகாந்த்தின் தாயார் புகார் கொடுத்துள்ளார்.
நடிகர் ஸ்ரீகாந்த் ரகசியத் திருமணம் செய்து கொண்ட வந்தனா சமீபத்தில் ஸ்ரீகாந்த்தின் வீட்டில் அதிரடியாக குடியேறினார். இதையடுத்து ஸ்ரீகாந்த் மற்றும் அவரது பெற்றோர் வீட்டை விட்டு வெளியேறி ஹோட்டலில் தங்கியுள்ளனர்.இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. வந்தனா, ஸ்ரீகாந்த்தின் அதிகாரப்பூர்வ மனைவி என்பதால் வெளியேற்ற உத்தரவிட முடியாது என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த நிலையில் ஸ்ரீகாந்த்தின் தாயார் ஜெயந்தி கிருஷ்ணமாச்சாரி இன்று காலை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் ஸ்ரீகாந்த்தின் வழக்கறிஞர் பாண்டியனும் வந்தார்.
ஆணையரை சந்தித்த ஜெயந்தி, வந்தனா அத்துமீறி வீட்டில் குடியேறியுள்ளார். அவரை வெளியேற்றக் கோரி ஏற்கனவே புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி புகார் கொடுத்தார்.
இந்தப் புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக பின்னர் பாண்டியன் தெரிவித்தார்.