Don't Miss!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- News கோதுமை பீர்.. ஒரே ஒரு பீர் பாட்டில் விலை இவ்வளவா? இப்பவே குஷியில் குடிமகன்கள்.. ஆனாலும் "இடிக்குதே"
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
பொள்ளாச்சி கொடூரம்.. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கேட்டு போராட்டத்தில் குதிக்கும் ஸ்ரீரெட்டி
பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராட இருப்பதாக நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: பொள்ளாச்சி பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கேட்டு போராட்டத்தில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. தனக்காக நீதி கேட்டு அரை நிர்வாணப் போராட்டம் நடத்திய அவர், தற்போது சில தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.
தொடர்ந்து சமூகவலைதளங்களில் பதிவுகள் வெளியிட்டு வரும் அவர், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம் தொடர்பாக புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பொள்ளாச்சி கொடூரம்.. மீடுல தான் பேசல இப்போவாவது பேசுங்களேன்.. பெரிய நடிகர்கள் மீது வரு கோபம்!
நேரில் சந்திப்பு:
அந்த வீடியோவில் அவர், "நான் விரைவில் சென்னை வந்து போலீஸ் மற்றும் அரசியல்வாதிகளை சந்திக்கவுள்ளேன். பாதிக்கப்பட்ட அந்த பெண்களையும் நேரில் சந்திக்க விரும்புகிறேன்.
போராட்டம்:
இது 7 வருடங்களாக நடந்து வருகிறது என கூறப்படுகிறது. பெண்கள் இப்படி குற்றங்களை மூடி மறைக்காமல் தைரியமாக புகார் அளித்தால்தான் நியாயம் கிடைக்கும். பாதிக்கப்பட்ட பெண்களுக்காக நான் போராடப் போகிறேன்.
சீர்திருத்தம் தேவை:
நம் நாட்டில் இத்தகைய குற்றங்களுக்கு எதிரான கடுமையான தண்டனைகள் சட்டமாக்கப்பட வேண்டும். நீதித்துறையை சீர் செய்ய வேண்டும். அப்போது தான் இத்தகைய குற்றங்கள் எதிர்காலத்தில் நடைபெறாது.
தண்டனை:
பொள்ளாச்சி சம்பவம் குறித்து கேள்விப்பட்டு இரண்டு நாட்களாக பெரும் கவலையடைந்துள்ளேன். பலாத்கார குற்றவாளிகள் எளிதில் தப்பிவிடக் கூடாது. அவர்களுக்கு சரியான தண்டனையை பெற்றுத்தர வேண்டும்" என ஸ்ரீரெட்டி அந்த வீடியோவில் கோபமாகப் பேசியுள்ளார்.
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!
-
அறிவு ஜீவியா? அரைவேக்காடா?.. பிஸ்மி போட்ட வீடியோ..ப்ளூ சட்டை மாறன் ரியாக்ஷன் என்ன தெரியுமா?