Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பொள்ளாச்சி கொடூரம்.. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கேட்டு போராட்டத்தில் குதிக்கும் ஸ்ரீரெட்டி
பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராட இருப்பதாக நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: பொள்ளாச்சி பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கேட்டு போராட்டத்தில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. தனக்காக நீதி கேட்டு அரை நிர்வாணப் போராட்டம் நடத்திய அவர், தற்போது சில தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.
தொடர்ந்து சமூகவலைதளங்களில் பதிவுகள் வெளியிட்டு வரும் அவர், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம் தொடர்பாக புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பொள்ளாச்சி கொடூரம்.. மீடுல தான் பேசல இப்போவாவது பேசுங்களேன்.. பெரிய நடிகர்கள் மீது வரு கோபம்!
நேரில் சந்திப்பு:
அந்த வீடியோவில் அவர், "நான் விரைவில் சென்னை வந்து போலீஸ் மற்றும் அரசியல்வாதிகளை சந்திக்கவுள்ளேன். பாதிக்கப்பட்ட அந்த பெண்களையும் நேரில் சந்திக்க விரும்புகிறேன்.
போராட்டம்:
இது 7 வருடங்களாக நடந்து வருகிறது என கூறப்படுகிறது. பெண்கள் இப்படி குற்றங்களை மூடி மறைக்காமல் தைரியமாக புகார் அளித்தால்தான் நியாயம் கிடைக்கும். பாதிக்கப்பட்ட பெண்களுக்காக நான் போராடப் போகிறேன்.
சீர்திருத்தம் தேவை:
நம் நாட்டில் இத்தகைய குற்றங்களுக்கு எதிரான கடுமையான தண்டனைகள் சட்டமாக்கப்பட வேண்டும். நீதித்துறையை சீர் செய்ய வேண்டும். அப்போது தான் இத்தகைய குற்றங்கள் எதிர்காலத்தில் நடைபெறாது.
தண்டனை:
பொள்ளாச்சி சம்பவம் குறித்து கேள்விப்பட்டு இரண்டு நாட்களாக பெரும் கவலையடைந்துள்ளேன். பலாத்கார குற்றவாளிகள் எளிதில் தப்பிவிடக் கூடாது. அவர்களுக்கு சரியான தண்டனையை பெற்றுத்தர வேண்டும்" என ஸ்ரீரெட்டி அந்த வீடியோவில் கோபமாகப் பேசியுள்ளார்.