Don't Miss!
- Lifestyle இந்த படத்தில் முதலில் என்ன தெரியுது சொல்லுங்க.. நீங்க உணர்ச்சி ரீதியா எவ்வளவு புத்திசாலி-ன்னு சொல்றோம்...
- Finance ஒரு மாச ஷாப்பிங்கிற்கு ரூ.1.86 கோடியாம்.. பெண்களை பொறாமையில் பொங்க வைக்கும் துபாய் பெண்..!!
- News எடப்பாடி பழனிசாமி நம்பர் ஒன் தான்.. எதில் தெரியுமா? விட்டு விளாசிய முதல்வர் ஸ்டாலின்
- Sports IPL 2024 : நைசாக முத்தம் கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர்.. மிரண்டு போன சாம்சன்.. டாஸ் நிகழ்வில் என்ன நடந்தது?
- Automobiles இ-பைக்கின் உற்பத்தி பணிகளை தொடங்கிய சென்னை நிறுவனம்! உலக நாடுகளே இத பாத்து மிரண்டு நிக்க போகுது!
- Technology BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
ஸ்ருதி பாலா... 'ரொம்ப நல்லவன்டா நீ' படத்துக்காக மேலும் ஒரு கேரள நாயகி!
கேரளத்திலிருந்து மற்றுமொரு நடிகையைப் பெற்றுள்ளது தமிழ் சினிமா. அவர் ஸ்ருதி பாலா. ஏ வெங்கடேஷ் இயக்கும் ‘ரொம்ப நல்லவன்டா நீ‘ படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார்.
‘மிர்ச்சி' செந்தில் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ‘ரோபோ' சங்கர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
தனது தமிழிப் பட பிரவேசம் குறித்து ஸ்ருதி பாலா கூறுகையில், "விளம்பரப் படங்கள் மற்றும் மாடலிங் செய்து கொண்டிருக்கும் பொழுது சினிமா வாய்ப்புகள் வந்தன.
சிறு வயது முதலே பாரம்பரிய நடனம் கற்று வந்ததால் நடிப்பு சுலபமாய் அமைந்தது.
எனது முதல் படம் நல்ல கதையுடையதாய் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அதற்கேற்றாற்போல் இயக்குனர் வெங்கடேஷ் இக்கதையை கூறினார். ‘அங்காடி தெரு' படத்தில் படுபயங்கரமாய் வரும் ஆளா இவர் என்று ஆச்சரியபர்பட்டேன்.
ரொம்ப நல்லவன்டா நீ நகைச்சுவை திரைப்படம். எனது கதாப்பாத்திரம் ஒரு தைரியமான படித்த பெண். ‘மிர்ச்சி' செந்தில் எனக்கு ஜோடியாக வருகிறார். துளியும் அலட்டல் இல்லாத மனிதர். இருப்பினும், ஷூட்டிங் சமயத்தில் செந்தில் , ‘ரோபோ' சங்கர் இருவரும் என்னை வம்பு செய்து கொண்டே இருப்பார்கள்.
‘ரோபோ' எப்பொழுதும் கலகலவென இருப்பார். அவர் இருந்தால் ஷூட்டிங் முழுதும் மகிழ்ச்சியாய் இருக்கும்," என்றார்.