Don't Miss!
- News அந்த ஜூஸ், மோர் தான் காரணமா? மயக்கம், நெஞ்சு வலி.. விஷ முறிவு மருந்து எடுத்துக்கொண்ட மன்சூர் அலிகான்
- Finance மத்திய நிதியமைச்சகம் முக்கிய அறிவிப்பு.. அதுவும் எலான் மஸ்க் இந்தியா வரும் நேரத்தில்.. வாவ்..!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களுக்கு ரகசியமாக உதவும் பாதுகாப்பு தேவதைகளாக இருப்பார்களாம்...!
- Sports தோனியிடம் கற்க ஒன்றுமில்லை.. முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கு அழைப்பு.. வார்த்தையை விட்ட பிசிபி நிர்வாகி!
- Technology எப்படி புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. Zomato அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஸ்ருதி பாலா... 'ரொம்ப நல்லவன்டா நீ' படத்துக்காக மேலும் ஒரு கேரள நாயகி!
கேரளத்திலிருந்து மற்றுமொரு நடிகையைப் பெற்றுள்ளது தமிழ் சினிமா. அவர் ஸ்ருதி பாலா. ஏ வெங்கடேஷ் இயக்கும் ‘ரொம்ப நல்லவன்டா நீ‘ படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார்.
‘மிர்ச்சி' செந்தில் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ‘ரோபோ' சங்கர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
தனது தமிழிப் பட பிரவேசம் குறித்து ஸ்ருதி பாலா கூறுகையில், "விளம்பரப் படங்கள் மற்றும் மாடலிங் செய்து கொண்டிருக்கும் பொழுது சினிமா வாய்ப்புகள் வந்தன.
சிறு வயது முதலே பாரம்பரிய நடனம் கற்று வந்ததால் நடிப்பு சுலபமாய் அமைந்தது.
எனது முதல் படம் நல்ல கதையுடையதாய் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அதற்கேற்றாற்போல் இயக்குனர் வெங்கடேஷ் இக்கதையை கூறினார். ‘அங்காடி தெரு' படத்தில் படுபயங்கரமாய் வரும் ஆளா இவர் என்று ஆச்சரியபர்பட்டேன்.
ரொம்ப நல்லவன்டா நீ நகைச்சுவை திரைப்படம். எனது கதாப்பாத்திரம் ஒரு தைரியமான படித்த பெண். ‘மிர்ச்சி' செந்தில் எனக்கு ஜோடியாக வருகிறார். துளியும் அலட்டல் இல்லாத மனிதர். இருப்பினும், ஷூட்டிங் சமயத்தில் செந்தில் , ‘ரோபோ' சங்கர் இருவரும் என்னை வம்பு செய்து கொண்டே இருப்பார்கள்.
‘ரோபோ' எப்பொழுதும் கலகலவென இருப்பார். அவர் இருந்தால் ஷூட்டிங் முழுதும் மகிழ்ச்சியாய் இருக்கும்," என்றார்.