twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராஜமௌலி படத்துல இந்த ரெண்டு ஹீரோவா... பாகுபலி பார்ட்-3?

    பாகுபலி படத்திற்கு பின் ராஜமௌலி இயக்க இருக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

    By Staff
    |

    சென்னை : பாகுபலி படத்திற்கு பின் ராஜமௌலி இயக்க இருக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இவரது புதிய படத்தில் இரண்டு ஹீரோக்கள் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

    பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களுக்குப் பின் ராஜமௌலியின் அடுத்த படம் என்னவென்று யாருக்கும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தார். இவர் ராம்சரணை வைத்து 2019ல் படம் எடுக்க இருப்பதாக கூறப்பட்டது.

    SS Rajamouli has revealed about his new double hero film

    அதற்கு இடையில் வேறு ஒரு படம் பண்ண இருக்கிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது இவர் இயக்கும் படம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அதன்படி இவர் எழுதியிருக்கும் புதிய கதை ஒன்றின் படப்பிடிப்பை 2018 ஜனவரியில் தொடங்க இருக்கிறார்.இது டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படமாக உருவாக உள்ளது. தமிழ், தெலுங்கு இரண்டு மொழியிலும் தயாராகும்.

    இவரது இந்த படத்தில் தெலுங்கு நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் நடிக்க உள்ளனர். கன்னட நடிகர் சுதீப் முக்கிய பாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் இது பாகுபலி பார்ட் -3ஆ என பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    English summary
    SS Rajamouli has revealed about his new double hero film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X