Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எடுப்பான அழகுடன்.. துடிப்பான சீதா.. அசத்திய ஆலியா பட்!
சென்னை : பாகுபலி படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிவரும் திரைப்படம் ஆர்.ஆர்.ஆர்.
சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படம் தயாராகி வருகிறது. ஜனவரி மாதமே இத்திரைப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் ராஜமௌலி தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
ஆர்.ஆர்.ஆர்.
பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின்ஆர் ஆர்.ஆர் திரைப்படத்திற்கு தமிழில் ரத்தம் ரணம் ரௌத்திரம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளிலும் இயக்கப்பட்டு வருகிறது.
வாழ்க்கை வரலாறு
சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. பெரும் வரலாற்றுத் திரைப்படமாக உருவாகி இத்திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
ராம் சரண் , ஜூனியர் என்.டிஆர்
தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட் மற்றும் தமிழ் நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தசரா பண்டிகையின் போது
ஜனவரி மாதமே திரைக்கு வரும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனதால் திரைப்படம் வெளியாவது தள்ளிப்போனது. தற்போது இத்திரைப்படம் தசரா பண்டிகையின் போது திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
|
ட்விட்டரில்
இப்படத்தின் இறுதிக்கட்டப்பணிகள் நடந்து வரும் நிலையில், இப்படத்தில் ஆலியா பட் சீதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆலியாபட்டின் 28வது பிறந்த நாளை முன்னிட்டு இயக்குனர் ராஜமௌலி புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆலியா பட் குத்தவைத்து உட்கார்ந்தவாரு சோகமே உருவான முகத்துடன் அப்படியே பார்ப்பதற்கு சீதாவைப்போல் இருக்கிறார். ஆலியா பட்டின் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி டிரெண்டாகி வருகிறது.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!