பொள்ளாச்சி பயங்கர கதை படம் மூலம் ஹீரோ ஆகிய எஸ்.எஸ்.ஆர். பேரன்
சென்னை: மறைந்த நடிகர் எஸ்.எஸ்.ஆரின் பேரன் ஆர்யன் நடிகராகியுள்ளார்.
மறைந்த நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனின் பேரன் எஸ்.எஸ்.ஆர். ஆர்யன் ஹீரோவாகியுள்ளார். ஜித்தன் 2, 1 ஏ.ம். ஆகிய படங்களை இயக்கிய ராகுல் கருத்துக்களை பதிவு செய் என்கிற படத்தை இயக்குகிறார்.

அந்த படம் மூலம் தான் ஆர்யன் நடிகராகியுள்ளார். உபசனா ராய் ஹீரோயினாக நடிக்கிறார். படம் குறித்து ராகுல் கூறியதாவது,
ஃபேஸ்புக் மூலம் ஒரு இளைஞருடன் நட்பாகி, அவனை காதலிக்கும் பெண் பற்றிய கதை இது. பின்பு தான் அந்த பெண்ணுக்கு அந்த வாலிபரின் உண்மையான குணம் தெரிய வருகிறது. பணம் கொடுக்காவிட்டால் நாம் இருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களை வெளியிடுவேன் என்று அந்த வாலிபர் மிரட்டுவார்.
அந்த வாலிபரிடம் இருந்து அந்த பெண் எப்படி தப்பித்து பழிவாங்குகிறார் என்பதை படத்தில் காட்டியுள்ளோம். எங்கள் படத்தின் கதை நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பயங்கரத்துடன் எதேச்சையாக ஒத்துப் போயுள்ளது என்றார்.


Click it and Unblock the Notifications











