Don't Miss!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
துபாயில் மேடையில் மயங்கி விழுந்து உயிர் இழந்த இந்திய வம்சாவளி ஸ்டாண்ட் அப் காமெடியன்
துபாய்: துபாயில் மேடையில் நின்று கொண்டு பார்வையாளர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தபோது இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்டாண்ட் அப் காமெடியன் மஞ்சுநாத் நாயுடு உயிர் இழந்தார்.
அபுதாபியில் பிறந்தவர் மஞ்சுநாத் நாயுடு(36). ஸ்டாண்ட் அப் காமெடியன். அவர் துபாயில் வசித்து வந்தார். அவர் கடந்த வெள்ளிக்கிழமை துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மேடையில் நின்று காமெடி செய்தார்.
அப்பொழுது அவர் தனக்கு ஒரு மாதிரியாக உள்ளது என்று கூறி மேடையில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார். பின்னர் அதில் இருந்து கீழே விழுந்து இறந்துவிட்டார். அதை பார்த்த பார்வையாளர்களோ அவர் நகைச்சுவை செய்கிறார் என்று நினைத்துவிட்டனர்.
இது குறித்து நாயுடுவின் தோழரும், சக காமெடியனுமான மிக்தாத் கூறியதாவது,
அவர் தான் கடைசியாக காமெடி செய்தார். அவர் மேடைக்கு சென்று கதைகள் கூறி பார்வையாளர்களை சிரிக்க வைத்தார். அவர் தன் அப்பா மற்றும் குடும்பத்தார் குறித்து பேசினார். அதன் பிறகு தனக்கு மனஉளைச்சல், பதட்டம், கவலை இருப்பது குறித்து பேசினார். அது குறித்து பேசத் துவங்கியதும் அவர் நிலைகுலைந்துவிட்டார்.
அவர் இறந்தது தெரியாமல் நடிப்பு என்று மக்கள் நினைத்துவிட்டனர். அவர் தனக்கு பதட்டம் இருப்பது குறித்து பேசியபடியே விழுந்து இறந்ததால் மக்கள் அதை காமெடி என்று நினைத்துவிட்டனர்.
அவரின் பெற்றோர் உயிருடன் இல்லை. ஒரு சகோதரர் மட்டும் உள்ளார். அவரின் உறவினர்கள் யாரும் துபாயில் இல்லை. கலை மற்றும் காமெடி வட்டாரத்தை சேர்ந்தவர்கள் தான் அவரின் குடும்பம். எங்களை தவிர அவருக்கு வேறு யாரும் இல்லை என்றார்.
மஞ்சுநாத் நாயுடு மாரடைப்பால் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.