Don't Miss!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- News மோடி ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீது கடும் நடவடிக்கை வேண்டாம் - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு பாதுகாப்பு கேட்டு கமிஷனரிடம் மனு கொடுத்த நாசர்
சென்னை: நட்சத்திரக் கிரிக்கெட் போட்டிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, நடிகர் சங்கத் தலைவர் நாசர் நேற்று சென்னை கமிஷனரிடம் மனு கொடுத்தார்.
நடிகர் சங்கக் கட்டிடம் கட்டுவதற்காக நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியை நடத்த தென்னிந்திய நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.
இந்த கிரிக்கெட் போட்டியில் ரஜினி, கமல் என்று முன்னணி நடிகர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். வருகின்ற ஏப்ரல் 17 ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.
இந்நிலையில் நேற்று நடிகர் சங்கத் தலைவர் நாசர், நடிகர்கள் ரமணா, லலிதா குமாரி ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர்.
இதுகுறித்து நடிகர் சங்கத் தலைவர் நாசர் "நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்ள உள்ளனர்.
மும்பை, கேரளா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களை சேர்ந்த நடிகர்களும் கலந்துகொள்கின்றனர். ரசிகர்கள், மக்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கிறோம். நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு பாதுகாப்பு கேட்டு கமிஷனரிடம் மனு அளித்துள்ளோம்.
இந்தப் போட்டிக்கான டிக்கெட் கட்டணம் இன்னும் முடிவு செய்யபடவில்லை" என்று பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.
நடிகர் ரமணா கிரிக்கெட் குறித்து நிருபர்களிடம் " 6 ஓவர்கள் கொண்ட போட்டியாக காலை முதல் நடைபெறும். 8 நட்சத்திர அணிகள் பங்கேற்கின்றன.
50 நடிகர்கள் போட்டியில் விளையாடுகின்றனர். 50 நடிகைகள் போட்டியில் கலந்து கொள்ளும் நடிகர்களை உற்சாகப்படுத்துவார்கள்' என்று கூறினார்.
விரைவில் இப்போட்டி குறித்த கட்டண விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.