Don't Miss!
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- News பிறந்தது சென்னை தான்.. ஆனா கன்னடா தெரியுமா? பிரசாரத்தில் தமிழர்களிடம் சிவராஜ் குமார் திடீர் கேள்வி
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தொடங்கியது ‘தர்பார்’ வியாபாரம்! - ரஜினிக்கு அதிர்ச்சியளித்த லைகா நிறுவனம்
Recommended Video
சென்னை : ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்த் தனது டப்பிங் பணிகளை தொடங்கி விரைவாக முடித்துவிட்டார்.
'தார்பார்' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். யோகி பாபு, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் இசையமைத்திருக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்திருக்கிறார்.
ரஜினியின் 'பேட்ட' படம் பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து 'தர்பார்' படத்தையும் பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ள லைகா நிறுவனம், தற்போது படத்தின் வியாபாரத்தை தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சன் பிக்சர்ஸ், வேல்ஸ் பிலிம்ஸ் என தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வரும் நிறுவனங்கள் 'தர்பார்' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்ற போட்டி போடுகிறதாம்.
திரைப்படத் துறையில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனங்கள் போட்டி போடுவது ஒரு பக்கம் இருந்தாலும், அதிமுக-வில் முதலமைச்சர் எடப்பாடிக்கு அடுத்தபடியாக இருக்கும் முக்கியமானவரை பின்னணியில் வைத்துக் கொண்டிருப்பவர் ஒருவரும் 'தர்பார்' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்ற முயற்சித்து வருகிறாராம்.
படத்திற்கு இத்தனை பேர் போட்டி போடுவதை பார்த்து வியந்த லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், படத்தின் விலையை அதிகரித்து விட்டதாம். அதாவது, தமிழக வெளியீட்டு உரிமைக்கு மட்டும் சுமார் ரூ.70 கோடிக்கு மேல் விலை நிர்ணயித்துள்ளதாம். ஆனால், படத்தை வாங்க போட்டி போடும் அனைவரும் ரூ.60 கோடியை தாண்டாததால், இன்னும் வியாபாரம் முடியவில்லையாம்.
'பேட்ட' படம் தமிழகத்தில் தயாரிப்பாளரின் ஷேராக சுமார் ரூ.54 கோடி வசூலித்ததாகவும், அதனை வைத்தே 'தர்பார்' படத்தை வாங்க முயற்சிப்பவர்கள், ரூ.60 கோடிக்கு மேல் விலை கொடுக்க யோசிப்பதாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும் லைகா நிறுவனம், தான் நிர்ணயித்த விலையை குறைக்காமல் பிடிவாதம் பிடிக்கிறதாம். இந்த விவகாரம் ரஜினி காதுக்கு போக, அதிர்ச்சியடைந்தவர், லைகா நிறுவனத்திற்கு எதற்கு இந்த பேராசை, இவர்கள் செய்யும் தவறால், எனக்கு தான் கெட்டப் பெயர் வருகிறது, என்று வருத்தமும் பட்டாரம்.