Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தொடங்கியது ‘தர்பார்’ வியாபாரம்! - ரஜினிக்கு அதிர்ச்சியளித்த லைகா நிறுவனம்
Recommended Video
சென்னை : ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்த் தனது டப்பிங் பணிகளை தொடங்கி விரைவாக முடித்துவிட்டார்.
'தார்பார்' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். யோகி பாபு, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் இசையமைத்திருக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்திருக்கிறார்.
ரஜினியின் 'பேட்ட' படம் பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து 'தர்பார்' படத்தையும் பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ள லைகா நிறுவனம், தற்போது படத்தின் வியாபாரத்தை தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சன் பிக்சர்ஸ், வேல்ஸ் பிலிம்ஸ் என தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வரும் நிறுவனங்கள் 'தர்பார்' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்ற போட்டி போடுகிறதாம்.
திரைப்படத் துறையில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனங்கள் போட்டி போடுவது ஒரு பக்கம் இருந்தாலும், அதிமுக-வில் முதலமைச்சர் எடப்பாடிக்கு அடுத்தபடியாக இருக்கும் முக்கியமானவரை பின்னணியில் வைத்துக் கொண்டிருப்பவர் ஒருவரும் 'தர்பார்' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்ற முயற்சித்து வருகிறாராம்.
படத்திற்கு இத்தனை பேர் போட்டி போடுவதை பார்த்து வியந்த லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், படத்தின் விலையை அதிகரித்து விட்டதாம். அதாவது, தமிழக வெளியீட்டு உரிமைக்கு மட்டும் சுமார் ரூ.70 கோடிக்கு மேல் விலை நிர்ணயித்துள்ளதாம். ஆனால், படத்தை வாங்க போட்டி போடும் அனைவரும் ரூ.60 கோடியை தாண்டாததால், இன்னும் வியாபாரம் முடியவில்லையாம்.
'பேட்ட' படம் தமிழகத்தில் தயாரிப்பாளரின் ஷேராக சுமார் ரூ.54 கோடி வசூலித்ததாகவும், அதனை வைத்தே 'தர்பார்' படத்தை வாங்க முயற்சிப்பவர்கள், ரூ.60 கோடிக்கு மேல் விலை கொடுக்க யோசிப்பதாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும் லைகா நிறுவனம், தான் நிர்ணயித்த விலையை குறைக்காமல் பிடிவாதம் பிடிக்கிறதாம். இந்த விவகாரம் ரஜினி காதுக்கு போக, அதிர்ச்சியடைந்தவர், லைகா நிறுவனத்திற்கு எதற்கு இந்த பேராசை, இவர்கள் செய்யும் தவறால், எனக்கு தான் கெட்டப் பெயர் வருகிறது, என்று வருத்தமும் பட்டாரம்.