"அரசு முடிவின்படி செயல்படுவோம்'' - திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனம்

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்களுக்கு பல சங்கள் உள்ளன. இதில் முக்கியமான அமைப்பு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம். இதன் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் இரு தினங்களுக்கு முன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது "முல்லைப்பெரியாறு பிரச்சினைக்காக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் வருகிற சென்னையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து சினிமா காட்சிகளையும் ரத்து செய்வது," என்று முடிவு எடுத்துள்ளதாக அறிவித்தார்.
இப்போது திரையரங்கு உரிமையாளர்களுக்காக இயங்கும் இன்னொரு அமைப்பான தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அபிராமி ராமநாதன் தலையில் செயல்படும் இந்த சம்மேளனத்தின் சிறப்பு கூட்டம் சென்னையில் உள்ள பிலிம்ஸ் சேம்பரில் நேற்று மாலை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், "முல்லைப்பெரியாறு பிரச்சினை மட்டுமின்றி, வேறு எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும், தமிழக மக்களின் நன்மைக்கே என்ன செய்ய வேண்டும் என்பது அனுபவம் வாய்ந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரியும். ஆதலால் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் தமிழக அரசுடன் ஒருங்கிணைந்த செயல்படுவோம்.
திரையரங்கு உரிமையாளர்கள் அனைவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உற்ற துணையாக இருந்து அவர் வழிகாட்டியபடி நடப்போம்," என்று தீர்மானங்கள் நிறைவேற்றினர்.
கூட்டத்தில், சம்மேளனத்தின் செயலாளர் சத்தியசீலன், துணைத்தலைவர் சாந்தி வேணுகோபால், பொதுச் செயலாளர் கணபதிராம் உள்பட ஏராளமான திரையரங்க உரிமையாளர்கள் பங்கேற்றனர்.


Click it and Unblock the Notifications











