Don't Miss!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- News ஒருத்தரை ஏமாற்றனும்னா ஆசையை தூண்டனும்.. சதுரங்க வேட்டை "பஞ்ச்" பேசி திமுகவை அட்டாக் செய்த எடப்பாடி
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
இந்தி திணிப்பு: ஒரேயொரு ட்வீட் போட்டு ஏ.ஆர். ரஹ்மான் நெத்தியடி
Recommended Video
சென்னை: இந்தி திணிப்புக்கு எதிராக ட்விட்டரில் பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் போட்ட ட்வீட் ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது.
மாநிலக் கல்வியில் ஆங்கிலம், தாய் மொழி தவிர்த்து இந்தியையும் சேர்த்து மூன்று மொழி கொள்கையை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியை திணிக்கக் கூடாது என்று கூறி ட்விட்டரில் பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள்.
தமிழக அரசியல் தலைவர்களும் இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர். #StopHindiImposition என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வரும் நேரத்தில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.
2 நாளில் இத்தனை கோடி வசூலா?: கடவுள் இருக்கான் நந்த கோபாலன் குமாரு #NGK
|
ஏ.ஆர். ரஹ்மான்
பரத் பாலா இயக்கத்தில் தனுஷ், பார்வதி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான மரியான் படத்தில் வந்த இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் தான் என்ன என்கிற ஹிட் பாடலை பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஜஸ்தீப் ஜோகி பாடிய வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஏ.ஆர். ரஹ்மான். ஜோகியின் வீடியோவை வெளியிட்டு பஞ்சாப் மாநிலத்தில் தமிழ் பரவுவதாக தெரிவித்துள்ளார் அவர்.
|
தமிழர்கள்
இந்தி திணிப்புக்கு எதிராக தமிழர்கள் ட்விட்டரில் குரல் கொடுத்து வரும் வேளையில் பஞ்சாபில் தமிழ் பரவுகிறது என்று ட்வீட் போட்டு நெத்தியடி கொடுத்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான். ரஹ்மானின் ட்வீட்டை பார்த்த தமிழர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சார், நீங்க லெஜன்ட் என்பதை இந்த ஊமக்குத்து ட்வீட் மூலம் நிரூபித்துவிட்டீர்கள் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
வேற லெவல்
கத்தாமல், கதறாமல் தன்னுடைய பாடலை ஒரு இந்திகாரர் பாடிய வீடியோவை போட்டு இந்தி திணிப்புக்கான தனது எதிர்ப்பை அழகாக பதிவு செய்துவிட்டார் ஏ.ஆர். ரஹ்மான். முன்னதாக வாக்களிக்குமாறு மக்களை அறிவுறுத்தச் சொன்ன பிரதமர் நரேந்திர மோடிக்கும் இதே போன்று தான் பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற விஷயங்களில் ரஹ்மான் வேற லெவல்.
இந்தி
ஒரு புறம் ரஹ்மான் இப்படி ட்வீட் போட்டு இந்தி திணிப்புக்கு நெத்தியடி கொடுக்க மறுபுறமோ நெட்டிசன்கள் வேறு மாதிரி கூறுகிறார்கள். தமிழ் மட்டுமே தெரிந்து வைத்துள்ள நிலையில் முக்கிய நாளில் நேசமணியை டிரெண்டு செய்ய வைத்து கதற விட்டோம். இந்நிலையில் இந்தியையும் கற்றுக் கொண்டால் கதறல்ஸ் ஜாஸ்தியாகிவிடும் பரவாயில்லையா என்று கேட்கிறார்கள் நெட்டிசன்கள்.