Don't Miss!
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
'ரோர், தி டைகர் ஆப் சுந்தர்பன்': தேசிய விலங்கிற்காக ஒரு படம்!
மும்பை: இந்தியாவின் தேசிய விலங்கு புலி என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால், அவ்வினமே அழிவின் பிடியில் உள்ளது என்பது நம்மில் எத்தனைப் பேருக்கு தெரியும் என்பது கேள்விக்குறியான விஷயம்தான்.
அப்படிப்பட்ட புலியை முக்கிய கதாபாத்திரமாக வைத்து வர இருக்கும் திரைப்படம்தான் "ரோர்- தி டைகர் ஆப் சுந்தர்பன்".
புலிகளின் சரணாலயம்:
கமல் சாதனாக் இயக்கியுள்ள இப்படம் முழுக்க, முழுக்க புலிகளின் சரணாலயமாக விளங்கும் சுந்தரவனக் காடுகளை அடிப்படையாக கொண்ட படமாகும்.
புகைப்பட நிருபர்:
உதய் என்பவர் ஒரு இளம் புகைப்பட நிருபர். அவருக்கு புலிகளின் காடு என அழைக்கப்படும் சுந்தரவனக் காடுகளில் பணி தொடர்பான ஒரு வேலை வருகின்றது.
வெள்ளைப் புலிக்குட்டி:
அந்நிலையில்தான் அங்கு வேட்டைக்காரர்களின் வலையில் சிக்கிய வெள்ளை வங்காள புலிக்குட்டி ஒன்றை காப்பாற்றி தன்னுடைய இடத்திற்கு கொண்டு வந்து விடுகின்றார்.
பீதியில் கிராம மக்கள்:
இந்நிலையில் போகப்போக கிராம மக்களிடம் அதனால் பீதி ஏற்படுகின்றது. அவர்களை அமைதிப்படுத்த வனத்துறையினர் அந்த குட்டி புலியை மீண்டும் எடுத்துச் சென்று விடுகின்றனர்.
தாய் புலி:
இந்நிலையில் அக்குட்டியின் ரத்த வாசனை மூலமாக குட்டியின் இடத்தை தெரிந்து கொண்ட அப்புலிக் குட்டியின் தாய் உதயின் தங்குமிடத்திற்கே வந்து விடுகின்றது.
உதயைக் கொல்லும் புலி:
அங்கு தன்னுடைய குட்டி இல்லாத காரணத்தினால் கோபம் கொள்ளும் தாய்ப் புலி உதயைக் கொன்று அவருடைய உடலுடன் மாயமாகி விடுகின்றது.
சகோதரர் கேப்டன்:
உதயின் சகோதரர் ஒரு கமாண்டோ படையின் கேப்டன். அவர் தன்னுடைய சகோதரனின் உடலைத் தேடி சுந்தர்பன் காட்டிற்கு வருகின்றார்.
அமைதி காக்கும் மக்கள்:
கிராம மக்கள் யாரும் பதில் சொல்லாத நிலையில், அவருக்கும், வனப்பகுதியின் பாதுகாப்பாளருக்கும் மோதல் ஏற்படுகின்றது. அப்பாதுகாப்பாளரான பெண், அந்த வழக்கு முடிவடைந்துவிட்டதாகவும், உதயின் சடலத்தை மீட்க மிகவும் அபாயகரமான அக்காட்டுப் பகுதிக்கு வேறு யாரையும் அனுப்ப இயலாது என்றும், தான் புலிகளை பாதுகாக்கத்தான் அங்கு இருப்பதாகவும் கூறுகின்றார்.
காட்டுக்குள் பயணம்:
ஆத்திரமடையும் உதயின் சகோதரர், இந்த விஷயத்தை தானே கையில் எடுக்க முடிவு செய்கின்றார். தன்னுடைய டீமுடன், உள்ளூர் கைடான மது மற்றும் புலிகள் பற்றி அறிந்த ஜும்பா என்பவருடன் அந்த வெள்ளைப் புலியைக் கண்டுபிடித்து கொல்லச் செல்கின்றார்.
மிரட்டும் சுந்தரவனக் காடு:
சுந்தரவனக் காட்டின் சதுப்பு நில மையப்பகுதிக்கு பயணம் செய்யும் போதுதான், அதுவரை பழங்கதைகளில் மட்டுமே கேட்டறிந்த பல அபூர்வமான விஷயங்களைக் காண்கின்றனர்.
புத்திசாலிப் புலி:
அந்த வெள்ளை பெண் புலி, ஒவ்வொரு முறையும் அவர்களை தனது புத்திசாலித்தனத்தால் ஏமாற்றுகின்றது. இந்நிலையில் அவர்களுடன் இருக்கும் வேட்டைக்காரர் பீரா, தனது திறமையை ஊருக்கு நிரூபிக்க கிடைத்த நல்ல வாய்ப்பாக இதைக் கருதுகின்றார்.
வேட்டையாகப் போகும் வேட்டைக்காரர்கள்:
அந்த ராயல் பெங்கால் புலியை வீழ்த்தி ஊர் மக்களிடம் தனது திறமையை நிரூபிக்க முடிவு செய்கிறார். இதற்காக திட்டமும் தீட்டுகின்றார். ஆனால் உண்மையில் அந்தப் புலியிடம் சிக்கப் போவது அவர் உள்ளிட்டமற்றவர்கள்தான் என்பது அவர்களுக்கு அப்போது தெரியவில்லை. மீதியை செப்டம்பரில் திரையில் பார்த்துக் கொள்ளுங்கள்!
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?