Don't Miss!
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இமைக்கா நொடிகள் படத்தின் கதை தெரியுமா?
இமைக்கா நொடிகள் படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
சென்னை: நயன்தாரா, அதர்வா நடிக்கும் இமைக்கா நொடிகள் படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.
கேமியோ பிலிம்ஸ் சார்பில் சி.ஜெ.ஜெயக்குமார் தயாரித்துள்ள 'இமைக்கா நொடிகள்' படத்தை டிமாண்டி காலனி பட இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் அதர்வா, நயன்தாரா, பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், ராஷி கன்னா, தேவன், ரமேஷ் திலக், பேபி மானசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்களுடன் கௌரவ தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹிப்பாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணியை ஏற்றுள்ளார்.
இந்த படத்தில் நயன்தாரா, அஞ்சலி விக்ரமாதித்யன் என்ற சிபிஐ அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கணவராக விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் வருகிறார். இவர்களது குழந்தையாக பேபி மானசி நடித்துள்ளார்.
இது தான் கதை:
பெங்களூருவில் வசிக்கும் சிபிஜ அதிகாரி அஞ்சலி விக்ரமாதித்யனுக்கு சவால் விட்டு, பெங்களூரு நகரத்தையே நடுங்க வைக்கும் தொடர் கொலைகளை செய்கிறார் ருத்ரா (அனுராக் காஷ்யப்). சென்னையில் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவன் அர்ஜூன் (அதர்வா) இந்த கொலைகளால் பாதிக்கப்படுகிறார்.
வாழ்வா? சாவா?
வாழ்வா சாவா என்ற சூழ்நிலைக்கு தள்ளப்படும் அர்ஜூனை, அஞ்சலி எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் கதை. அடுத்தடுத்த அதிர்ச்சி திருப்பங்களுடன் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
சிறப்புத் தோற்றம்:
இந்த படத்தில் நயன்தாராவை காதலித்து திருமணம் செய்துகொள்ளும் விஜய் சேதுபதி, மனைவியை மிகவும் நேசிக்கும் கணவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கும் அழகான பெண் குழந்தை பிறக்கிறது. விஜய் சேதுபதிக்கு பின்னர் தனியாளாக நயன்தாரா அந்த குழந்தையை வளர்க்கிறார்.
ராஷி கன்னா:
நயன்தாராவின் தம்பியாக அதர்வா நடித்துள்ளார். அவரது காதலியாக டோலிவுட்டில் இருந்து தமிழுக்கு வந்திருக்கும் ராஷி கன்னா நடித்துள்ளார். காமெடி கலந்த குணச்சித்திர வேடத்தில் ரமேஷ் திலக் நடித்துள்ளார்.
அதே டயலாக் :
முன்னதாக விஜய்சேதுபதி, நயன் தாரா ஜோடி சேர்ந்து நடித்த நானும் ரவுடி தான் படத்தில், அடிக்கடி நயனைப் பார்த்து விஜய்சேதுபதி, ‘ஆர் யூ ஓகே பேபி?' எனக் கேட்டுக் கொண்டே இருப்பார். ரசிகர்களிடம் இந்த டயலாக் பிரபலமானது. அதனைத் தொடர்ந்து இப்படத்திலும் அதேபோன்று, நயனைப் பார்த்து விஜய்சேதுபதி, ‘ஆர் யூ ஓகே பேபி?' எனக் கேட்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.