Don't Miss!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்..!!
- News சூப்பரான சான்சை விட்டுடாதீங்க.. முக்கிய ராசிக்கு அடிக்க போகும் பம்பர் யோகம்.. குரு பெயர்ச்சி பலன்கள்
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
டெல்லியில் உள்ள தெருவுக்கு.. மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் பெயர்.. கவுன்சிலர் தகவல்!
டெல்லி: மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பெயர், தெரு ஒன்றுக்கு சூட்டப்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், கடந்த ஜூன் 14 ஆம் தேதி திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
சொந்த காசுலேயே சூன்யம் வச்சுக்கிட்டீயே அச்சும்மா.. அர்ச்சனாவை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!
இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தில் பெச்சாரா
கிரிக்கெட் வீரர் தோனியின் பயோபிக்கில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் சுஷாந்த் சிங். இவர் நடித்த கடைசி படமான, தில் பெச்சாரா ஒடிடி-யில் வெளியாகி வரவேற்பை பெற்றது. நடிகர் சுஷாந்த் சிங் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
சிபிஐ விசாரணை
சுஷாந்தின் நண்பர்கள், தோழிகள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், இயக்குனர்கள் என சுமார் 38 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலியான நடிகை ரியா சக்கரவர்த்தியிடமும் விசாரித்தனர். சிபிஐ, விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகிறது.
ராஜ்புத் சாலை
இதற்கிடையே, பீகாரில் சுஷாந்தின் சொந்த ஊரான புர்னியாவில் இருக்கும் ஒரு சாலைக்கு சுஷாந்த் சிங்கின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மதுபானி முதல் மட்டா சவுக் வரை இருக்கும் சாலைக்கு சுஷாந்த் சிங் ராஜ்புத் சாலை என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் அங்கு அமைந்துள்ள போர்டு நிறுவன ரவுண்டானாவிற்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஆண்ட்ரூஸ் கன்ச்
இந்நிலையில், டெல்லியில் உள்ள தெரு ஒன்றுக்கு அவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஆண்ட்ரூஸ் கன்ச் என்ற தெருவுக்கு நடிகர் சுஷாந்த் சிங் பெயரைச் சூட்ட வேண்டும் என்று தெற்கு டெல்லி மாநகராட்சியில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அதற்கு இப்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கவுன்சிலர்
இதை தெற்கு டெல்லி காங்கிரஸ் கவுன்சிலரான அபிஷேக் தத் தெரிவித்துள்ளார். விரைவில் இதன் திறப்பு விழா நடக்க இருக்கிறது. சுஷாந்த் சிங் ராஜ்புத் பெயரை தெரு ஒன்றுக்கு சூட்டுவது தகுதியானதுதான் எனவும் அவர் கூறியுள்ளார். சுஷாந்த் சிங்கின் 35 வது பிறந்த நாளை முன்னிட்டு இதை அறிவித்துள்ளனர்.