Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இந்த வாரமும் படங்கள் ரிலீஸ் இல்லை... தமிழகத்தில் நீடிக்கும் ஸ்ட்ரைக்!
Recommended Video
சென்னை : தியேட்டர்களில் திரைப்படங்களை டிஜிட்டல் முறையில் திரையிடும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்கும், தென்னிந்தியத் திரையுலகினருக்கும் இடையே மோதல் இருந்தது.
டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் அதிகக் கட்டணங்கள் வசூலிப்பதாகவும், அவற்றை குறைக்க வேண்டும் என்றும் திரையுலகங்கள் போர்க்குரல் எழுப்பினார்கள்.
அதைத் தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக தென்னிந்திய திரையுலக தயாரிப்பாளர்கள் படங்களை வெளியிடாமல் ஸ்ட்ரைக் செய்தனர். மற்ற மாநிலங்களில் ஸ்டிரைக் முடிவுக்கு வந்த நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் தொடர்கிறது.
கடுமையான எதிர்ப்பு இல்லை
கேரளா மாநிலத்தில் ஒரு நாள் மட்டும் தியேட்டர்களை மூடி எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். கர்நாடகாவில் இது பற்றி பெரிதாக எந்தப் பிரச்சினையும் எழவில்லை. ஆனால், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக புதிய படங்களை வெளியிடாமல் நிறுத்தினார்கள்.
20 சதவீத கட்டண குறைப்பு
டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்கும், தெலுங்குத் திரையுலகினருக்கும் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் டிஜிட்டல் நிறுவனங்கள் 20 சதவீத கட்டணக் குறைப்புக்கு சம்மதித்தார்கள். ஆனால், 25 சதவீதம் குறைக்க வேண்டும் என தமிழ்த் திரையுலகம் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.
வலியுறுத்தல்
அதற்கு டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் சம்மதிக்கவில்லை. இது தொடர்பாக நடந்த பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன. மற்ற மாநிலங்களில் ஸ்டிரைக் முடிவுக்கு வந்த நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் தொடர்கிறது.
திரையரங்கு உரிமையாளர்கள்
இதனிடையே, புதிய படங்கள் வெளிவராததால் தமிழ்நாட்டில் பல தியேட்டர்களில் கூட்டம் இல்லாததால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. பல தியேட்டர்களை மூட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. எனவே, தியேட்டர் உரிமையாளர்களும் இன்று சந்தித்து பேச உள்ளனர்.