Don't Miss!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- News ஒருத்தரை ஏமாற்றனும்னா ஆசையை தூண்டனும்.. சதுரங்க வேட்டை "பஞ்ச்" பேசி திமுகவை அட்டாக் செய்த எடப்பாடி
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
கமல் vs ஞானவேல்ராஜா.. கோலிவுட்டில் நடக்கும் புதிய சண்டை.. என்ன பிரச்சனை? யார் மீது தவறு!
நடிகர் கமல்ஹாசன் மீது பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பண மோசடி புகார் அளித்துள்ளார்.
சென்னை: நடிகர் கமல்ஹாசன் மீது பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பண மோசடி புகார் அளித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் 1 படம் வெளியான சமயத்தில் கடும் பண நெருக்கடியில் இருந்தார். பெரும் அளவு கடன் வாங்கித்தான் அவர் அந்த படத்தை வெளியிட்டார்.
அதேபோல் உத்தம வில்லன் படம் வெளியான போது நடிகர் கமல்ஹாசன் கடனில் மூழ்கினார். சிலரிடம் கடன் வாங்கிதான் அவர் அந்த படத்தை வெளியிட்டார்.
அந்த பத்து கோடி என்னாச்சு... உத்தமவில்லன் கமலுக்கு எதிராக ஞானவேல் ராஜா மல்லுக்கட்டு
ஆனால் இல்லை
ஆனால் உத்தம வில்லன் படம் அவர் நினைத்த அளவிற்கு செல்லவில்லை. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் மற்றும் இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சேர்த்து வெளியிட்டது. இரண்டு பேருக்கும் இதனால் நஷ்டம் ஏற்பட்டது.
முறைகேடு
இந்த படத்தை வெளியிடுவதற்காக அந்த நேரத்தில் கமல்ஹாசன் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜாவிடம் கடன் வாங்கி இருந்தார். 10 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தார். ஆனால் படம் தோல்வி அடைந்த காரணத்தால் கமல்ஹாசன் நினைத்த வருமானம் அவருக்கு கிடைக்கவில்லை.
என்ன வாக்கு
இந்த நிலையில் தான் வாங்கிய கடனுக்கு பதிலாக கமல்ஹாசன் படம் நடித்து கொடுப்பதாகவும் அல்லது கடனை சில மாதங்கள் கழித்து வட்டியுடன் கொடுப்பதாகவும் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜாவிடம் கமல்ஹாசன் கூறியுள்ளார். இதை கேட்டு இத்தனை வருடங்கள் அவர் எதுவும் குறிப்பிடாமல் இருந்துள்ளார். ஆனால் கமல்ஹாசன் அதன்பின் ஞானவேல் ராஜாவிடம் படம் நடித்து கொடுக்கவில்லை.
மோசடி
இதனால் கமல்ஹாசன் தான் வாக்களித்தபடி பணமும் கொடுக்கவில்லை , படமும் நடித்து கொடுக்கவில்லை என்று ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தயாரிப்பாளர் சங்கத்தில் கமல்ஹாசனுக்கு எதிராக மோசடி புகார் கொடுத்துள்ளார்.
ஆனால் சிக்கல்
ஆனால் இதற்கு பின் வேறு சில காரணங்கள் இருக்கலாம் என்று சில தயாரிப்பாளர் தரப்பில் கூறுகிறார்கள். கமல்ஹாசன் மீது இருக்கும் வெறுப்பில் சிலர் இப்படி செய்கிறார்கள். அவரிடம் நேரடியாக பணம் கேட்டால் கொடுத்திருப்பார் என்று சிலர் கூறுகின்றனர்.
அரசியல் அழுத்தம்
இது மட்டுமின்றி இது அரசியல் ரீதியான அழுத்தம். இதற்கு பின் வேறு யாராவது இருக்கலாம் என்று கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். இது தொடர்பாக விரைவில் தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுக்க உள்ளது என்கிறார்கள்.