Don't Miss!
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
கமல் vs ஞானவேல்ராஜா.. கோலிவுட்டில் நடக்கும் புதிய சண்டை.. என்ன பிரச்சனை? யார் மீது தவறு!
நடிகர் கமல்ஹாசன் மீது பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பண மோசடி புகார் அளித்துள்ளார்.
சென்னை: நடிகர் கமல்ஹாசன் மீது பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பண மோசடி புகார் அளித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் 1 படம் வெளியான சமயத்தில் கடும் பண நெருக்கடியில் இருந்தார். பெரும் அளவு கடன் வாங்கித்தான் அவர் அந்த படத்தை வெளியிட்டார்.
அதேபோல் உத்தம வில்லன் படம் வெளியான போது நடிகர் கமல்ஹாசன் கடனில் மூழ்கினார். சிலரிடம் கடன் வாங்கிதான் அவர் அந்த படத்தை வெளியிட்டார்.
அந்த பத்து கோடி என்னாச்சு... உத்தமவில்லன் கமலுக்கு எதிராக ஞானவேல் ராஜா மல்லுக்கட்டு
ஆனால் இல்லை
ஆனால் உத்தம வில்லன் படம் அவர் நினைத்த அளவிற்கு செல்லவில்லை. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் மற்றும் இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சேர்த்து வெளியிட்டது. இரண்டு பேருக்கும் இதனால் நஷ்டம் ஏற்பட்டது.
முறைகேடு
இந்த படத்தை வெளியிடுவதற்காக அந்த நேரத்தில் கமல்ஹாசன் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜாவிடம் கடன் வாங்கி இருந்தார். 10 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தார். ஆனால் படம் தோல்வி அடைந்த காரணத்தால் கமல்ஹாசன் நினைத்த வருமானம் அவருக்கு கிடைக்கவில்லை.
என்ன வாக்கு
இந்த நிலையில் தான் வாங்கிய கடனுக்கு பதிலாக கமல்ஹாசன் படம் நடித்து கொடுப்பதாகவும் அல்லது கடனை சில மாதங்கள் கழித்து வட்டியுடன் கொடுப்பதாகவும் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜாவிடம் கமல்ஹாசன் கூறியுள்ளார். இதை கேட்டு இத்தனை வருடங்கள் அவர் எதுவும் குறிப்பிடாமல் இருந்துள்ளார். ஆனால் கமல்ஹாசன் அதன்பின் ஞானவேல் ராஜாவிடம் படம் நடித்து கொடுக்கவில்லை.
மோசடி
இதனால் கமல்ஹாசன் தான் வாக்களித்தபடி பணமும் கொடுக்கவில்லை , படமும் நடித்து கொடுக்கவில்லை என்று ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தயாரிப்பாளர் சங்கத்தில் கமல்ஹாசனுக்கு எதிராக மோசடி புகார் கொடுத்துள்ளார்.
ஆனால் சிக்கல்
ஆனால் இதற்கு பின் வேறு சில காரணங்கள் இருக்கலாம் என்று சில தயாரிப்பாளர் தரப்பில் கூறுகிறார்கள். கமல்ஹாசன் மீது இருக்கும் வெறுப்பில் சிலர் இப்படி செய்கிறார்கள். அவரிடம் நேரடியாக பணம் கேட்டால் கொடுத்திருப்பார் என்று சிலர் கூறுகின்றனர்.
அரசியல் அழுத்தம்
இது மட்டுமின்றி இது அரசியல் ரீதியான அழுத்தம். இதற்கு பின் வேறு யாராவது இருக்கலாம் என்று கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். இது தொடர்பாக விரைவில் தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுக்க உள்ளது என்கிறார்கள்.
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?