Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இது புது டிவிஸ்ட்டா இருக்கே.. மாஸ்டர் சில்வாவும் இனி ஹீரோதான்!
சென்னை: இதுவரை தமிழ் சினிமாவில் காமெடியன், வில்லன், இசையமைப்பாளர், பாடகர் மற்றும் இயக்குனர் என்று பலரும் ஹீரோக்களாகி உள்ளார்கள். ஹீரோக்கள் வில்லன்களாக, காமெடியனாக மாறியுள்ளார்கள். பல வெற்றி திரைப் படங்களை கொடுத்துள்ளார்கள்.
பிரபல ஸ்டண்ட் இயக்குனர் ஸ்டன் சிவா, வின்சென்ட் செல்வாவின் ஆக்ஷன் த்ரில்லர் 'வேட்டையன்’ படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். பிதாமகன், வேட்டையாடு விளையாடு போன்ற படங்களில் நடித்திருந்தாலும், ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பது தான் ஒருபோதும் எதிர்பார்க்காத ஒன்று என்று கூறுகிறார்.
“நான் பல படங்களுக்கு சண்டை காட்சிகள் அமைத்திருக்கிறேன் என்பது உண்மைதான், அதைச் செய்வதை மிகவும் விரும்பி செய்தேன். ஆனால் நான் ஒரு அதிரடி படத்தில் ஹீரோவாக நடிக்கப்பேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. விஜய் மில்டனின் கோலி சோடா 2 இல் எதிர்மறையான பாத்திரத்தில் நடித்ததுதான் எனக்கு இந்த பாத்திரத்தை அளித்தது. நான் தற்போது சுசீந்திரனின் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ”
30 வருடங்களாக சினிமா துறையில் இருந்து பாலிவுட் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் படங்களுக்கான அதிரடி காட்சிகளை ஹெல்மிங் செய்யும் சிவா, தனது சில படங்களில் நடித்திருப்பதால் நடிப்பு தனக்கு ஒன்றும் புதிதல்ல என்று கூறுகிறார். இறுதி கட்ட படப்பிடிப்பில் இருக்கும் வேட்டையன், பெங்களூர், கோபிசெட்டிபாளையம் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது. இப்படத்தில் நேகா, வைஷ்ணவி சந்திரன், துஷாரா, யோகி பாபு மற்றும் பலர் நடிக்கின்றனர்.
பழங்குடி கிராமத்தில் வசிக்கும் சிவா வளர்க்கும் யானையை சிலர் கடத்த முற்படும்போது, அதை தடுக்க முயற்சிக்கும் சிவா மீது மாவோயிஸ்ட் முத்திரை குத்தப்படுகிறது. இதிலிருந்து எப்படி வெளியே வந்து அவர் யானையை காப்பாற்றுகிறார் என்பதே கதை. பாகுபலி படத்தில் நடித்த யானை இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.