Don't Miss!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Technology Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விக்ரம் மகனுடன் என் மகள் நடிக்கிறாரா?: கவுதமி விளக்கம்
Recommended Video
சென்னை: விக்ரம் மகனுக்கு ஜோடியாக தனது மகள் நடிக்க உள்ளதாக வெளியான செய்தி குறித்து கவுதமி விளக்கம் அளித்துள்ளார்.
கவுதமி தனது மகள் சுப்புலட்சுமியை தன் வழியில் நடிகையாக்கி பார்க்க விரும்புகிறார் என்று செய்திகள் வெளியாகின. இதற்காக அவர் பெரிய இயக்குனர்களை அணுகி வருவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் சுப்புலட்சுமி பாலா இயக்கி வரும் வர்மா பட ஹீரோயினாகிவிட்டதாக தகவல் வெளியானது.
வர்மா
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படம் தமிழில் வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தில் சீயான் விக்ரமின் மகன் த்ருவ் ஹீரோவாக நடித்து வருகிறார்.
படப்பிடிப்பு
வர்மா படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நேபாளத்தில் நடைபெற்றது. மகனுக்கு துணையாக விக்ரமும் நேபாளம் சென்றார். முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்டு படக்குழு சென்னை திரும்பியது.
சுப்புலட்சுமி
வர்மா படத்தின் ஹீரோயின் யார் என்பதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் கவுதமியின் மகள் சுப்புலட்சுமியை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
|
படிப்பு
என் மகள் நடிக்க வருவதாக வெளியான செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். சுப்புலட்சுமி படிப்பில் கவனம் செலுத்துகிறார். தற்போது நடிக்கும் திட்டம் இல்லை. அவரை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என்று கவுதமி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.