குண்டு படம் வெற்றி.. மனைவி கண்ணில் கண்ணீர்.. அரவணைத்த இயக்குநர்!
Recommended Video
சென்னை: இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படம் நேற்று வெளியானது. இப்படத்தின் முதல் காட்சியை மக்களோடு மக்களாக பார்த்த இயக்குனரின் மனைவி ஆனந்த கண்ணீரில் நனைந்தார்.
பரியேறும் பெருமாள் என்னும் மாபெரும் வெற்றிப்படத்திற்கு பிறகு பா.இரஞ்சித் தயாரிக்கும் படம் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு. அட்டக்கத்தி தினேஷ், ஆனந்தி, ரித்விக்கா, முனீஸ்காந்த், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்து உள்ளனர்.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கி உள்ளார். நேற்று வெளியான படத்தின் முதல் காட்சியை மக்களோடு மக்களாக பார்த்து முடித்த பிறகு இயக்குனரின் மனைவி மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

தனது பெயரோடு தன் மனைவியின் பெயரையும் சேர்த்து வைத்துள்ள இயக்குனர் அதியன் ஆதிரை தன் மனைவியின் கண்ணீரை துடைத்துவிடும் தருணம் தரும் மகிழ்ச்சியே அவருக்கு பெரும் விருதாக கிடைத்துள்ளது.
இந்த நிகழ்வு அதியனின் வாழ்க்கையில் அவர் கடந்து வந்த வலிகளை நினைத்து அவரது மனைவி கண்ணீராக வெளிபட்டுள்ளார்.

ரஞ்சித் எப்போதும் தரமான கருத்துக்களை தன் படங்களில் சொல்லுவார். அவரைப் போலவே அதியனும் ஒரு தரமான கருத்தை இப்படத்தில் சொல்லி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











