Don't Miss!
- News "ஐயோ பாவம்!" அண்ணாமலை, தமிழிசை.. தனது ஸ்டைலில் ஆளுக்கு ஒரு சொலவடை சொல்லி கலாய்த்த துரைமுருகன்!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு நடந்து வந்துட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான ராஜஸ்தான் அணி!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பாலாஜியின் உண்மை முகம் இதுதான்.. சுச்சியின் இன்ஸ்டா பதிவால் அதிர்ச்சியான ரசிகர்கள்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சுச்சி, பாலாஜி குறித்து பதிவிட்டுள்ள இன்ஸ்டா போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Recommended Video
பிரபல பாடகியும் ஆர்ஜேவுமான சுசித்ரா பிக்பாஸ் வீட்டுக்குள் இரண்டாவது வைல்டு கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்றார் சுச்சி.
சென்ற வேகத்தில் ஒரு சிலருக்கு சரியான ரிவ்வியூவும் சிலருக்கு சொதப்பல் ரிவ்வியூவும் கொடுத்தார்.
மூன்றாவது வாரத்தில்
பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற உடன் எல்லோருடனும் பழகிய சுச்சி, அடுத்தடுத்த நாட்களில் பாலாஜியிடம் லாக்கானார். அவரை தவிர வேறு யாரிடமும் அந்த அளவுக்கு பேசமால் இருந்தார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற மூன்றாவது வாரத்திலேயே முதல் முறையாக நாமினேஷனுக்கு வந்து வெளியேறினார் சுச்சி.
திடீர் திடீரென அழுகை
அவர் பாலாவிடம் மட்டும் நெருக்கமாக பழகியதுதான் அவரது எலிமினேஷனுக்கு காரணம் என்றும் சுச்சியிடம் இருந்து ரொம்ப எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றம்தான் மிஞ்சியதாகவும் ரசிகர்கள் கருத்து பதிவிட்டனர். அதே நேரத்தில் சுச்சி, பிக்பாஸ் வீட்டுக்குள் திடீர் திடீரென அழுதார் என்றும் கத்தினார் என்றும் தகவல் பரவியது.
வெறும் நட்புதான்
பிக்பாஸ் வீட்டுக்குள் பாலாஜிக்கு ஆதரவாக இருந்த சுச்சி வெளியே வந்த பிறகும் அவருக்கு ஆதரவாய் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். அண்மையில் பாலாஜிக்கும் ஷிவானிக்கும் இடையில் இருப்பது வெறும் நட்புதான் என்பதை குறிக்கும் மீம்ஸ் ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் சுச்சி.
கண்ணீர் விட்ட போட்டோஸ்
இந்நிலையில் தற்போது மீண்டும் பாலாஜிக்கு ஆதரவாய் அவருக்கு ஒரு பதிவை ஷேர் செய்துள்ளார். அவரது பதிவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது பிக்பாஸ் வீட்டில் முதல் வாரத்தில் நடைபெற்ற கடந்து வந்த பாதை டாஸ்க்கில் பாலாஜி கண்ணீர் விட்டு பேசிய போட்டோக்களை ஷேர் செய்துள்ளர்
குற்றச்சாட்டுகள்
தனது அப்பாவும் அம்மாவும் குடிக்காரர்கள், இருவரும் தன்னை பற்றி கவலைப் படவில்லை. தன்னுடைய அம்மா தனக்கு ஒரு நாள் கூட சமைத்து கொடுத்ததில்லை என பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார். மேலும் தனக்கான எதுவுமே கிடைக்கவில்லை என்றும் நண்பர்கள் உதவியுடன்தான் தான் வளர்ந்ததாகவும் கூறினார்.
அப்பா அம்மா வேதனை
ஆனால், பாலாஜியின் நட்பு வட்டம் இதனை மறுத்தது. பாலாஜி வசதியான குடும்பத்தை சேர்ந்தவர், அவரது அம்மா இல்லத்தரசி என்றும் அப்பா ஒரு தொழில் அதிபர் என்றும் கூறி வருகின்றனர். மேலும் பாலாஜி சொன்னதெல்லாம் பொய் என்றும் பாலாஜி பேசியதை கேட்டு அவரது அப்பா அம்மா பெரும் வேதனையில் உள்ளதாகவும் தகவல் பரவியது.
பெண்ணை தூக்கி தம்பெல்ஸ்
அதோடு பாலாஜி குடியும் கும்மாளமுமாய் இருக்கும் போட்டோக்களும் வெளியானது. இளம் பெண் ஒருவரை நீச்சல் குளத்தில் அரை நிர்வாணமாய் பாலாஜி தலைக்கு மேல் தூக்கி தம்பெல்ஸ் எடுத்த வீடியோக்களும் வெளியானது. பிக்பாஸ் வீட்டிலும் பாலாஜி டபுள் கேம் ஆடி வருகிறார்.
பரிதாபப்பட்டுள்ள ஹவுஸ்மேட்ஸ்
இந்நிலையில் பாலாஜி தனது அப்பா அம்மா குறித்து கண்ணீர் மல்க பேசியதுதான் அவரது உண்மை முகம். இந்த முகத்துக்கு எதையும் போலியாக செய்யத் தெரியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சுச்சி இன்னமும் பாலாஜியை கண்மூடித்தனமாக நம்புகிறாரே என உச்சு கொட்டி பரிதாபப்பட்டுள்ளனர்.