Don't Miss!
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஃபேஸ்புக்கில் பிரபல நடிகையை உறவுக்கு அழைத்த நெட்டிசன்
மும்பை: நெட்டிசன் ஒருவர் பிரபல நடிகையும், பாடகியுமான சுசித்ரா கிருஷ்ணமூர்த்தியிடம் ஃபேஸ்புக்கில் அசிங்கமான கேள்வி கேட்டுள்ளார்.
திரையுலக பிரபலங்கள் பெரும்பாலானோர் சமூக வலைதளங்களில் கணக்கு வைத்துள்ளனர். அதில் பலர் ரொம்ப ஆக்டிவாக உள்ளனர். அதில் நடிகையும், பாடகியுமான சுசித்ரா கிருஷ்ணமூர்த்தியும் ஒருவர்.
ஃபேஸ்புக்கில் ஒருவர், ஃபோனில் நாம் செக்ஸ் வைத்துக் கொள்ளலாமா என்று அசிங்கமாக கேட்டார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுசித்ரா அந்த கேள்வியை பிரிண்ட் ஸ்கிரீன் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டு மும்பை போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். தேசிய குற்றப் பிரிவு கவுன்சிலில் வேலை செய்வதாகக் கூறி அந்த நபர் சுசித்ராவிடம் வம்பிழுத்துள்ளார்.
When someone claims to work on National Prime Prevention council & harasses women this way @MahaCyber1 @MumbaiPolice pls take note. This message was sent to me on @facebook ! pic.twitter.com/KJ0OfUUqNy
— Suchitra Krishnamoorthi (@suchitrak) July 24, 2019
சுசித்ராவின் ட்வீட்டை பார்த்த மும்பை போலீசார் உடனே பதில் அளித்தனர். போலீசார் கேட்டுக் கொண்டபடி தனது தொடர்பு விபரங்களை சுசித்ரா அளித்தார்.
அதன் பிறகு மும்பை போலீசார் ட்விட்டரில் கூறியதாவது, உங்களின் புகாரை சமூக வலைதள பிரிவு மற்றும் சைபர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். மேலும் நீங்கள் உதவி கேட்டு 100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது எங்களுக்கு ட்வீட்டும் செய்யலாம் என்று தெரிவித்துள்ளனர்.
உங்களின் உரிய பதிலுக்கு நன்றி. உங்களின் கவனத்திற்கு இதை கொண்டு வர விரும்பினேனே தவிர எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர்கள் எனக்கு இப்படி மெசேஜ் அனுப்பினால், சமூக வலைதளங்களில் இருக்கும் பல இளம் பெண்களின் நிலை குறித்து யோசித்து பாருங்கள் என்று சுசித்ரா தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் பிரபலங்களிடம் இது போன்று கேவலமான கேள்விகள் கேட்பது வழக்கமாகிவிட்டது. சில பிரபலங்கள் வெளியிடும் புகைப்படங்களுக்கான கமெண்டுகளை பார்க்கவே முடியாது, அந்த அளவுக்கு வக்கிரமாக இருக்கும்.
சமூக வலைதளம் என்பது பிறரை வறுத்தெடுக்க இருக்கும் தளம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!