தங்கையுடன் உடலுறவு?.. மாஜி கணவர் பற்றி அடுத்த குண்டை தூக்கிப் போட்ட சுசித்ரா.. புதிய பேட்டி!

சென்னை: பாடகி சுசித்ரா தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் குறித்து தொடர்ந்து பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். நேற்று இரவு அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில்
அனைத்து யூடியூப் சேனல்களும் தப்பு தப்பா தம்ப் நைல் வைக்கிறாங்க என்றும் இனிமேல் தான் எந்தவொரு யூடியூப் சேனல்களுக்கும் பேட்டி அளிக்க போவதில்லை என்றும் கடைசியாக ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருக்கிறேன் அவர்களும் என்ன டைட்டில் வைக்கப் போகிறார்கள் எனத் தெரியவில்லை என்றார்.

இந்நிலையில் தற்போது அந்தப் பேட்டியும் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. தனது கணவர் கார்த்திக் குமார் ஒரு இம்போடன்ட் என்றும் தனுஷுடன் இணைந்து யாரடி நீ மோகினி படத்தில் நடிக்க ஆரம்பித்த போது அவர் பார்ட்டி பாயாக மாறிவிட்டார் என்றும் கூறியுள்ளார்.

Suchitra reveals her sister and her ex husband done a one night stand

மேலும், அதிர்ச்சி தரும் விதத்தில் தனது தங்கையுடன் கார்த்திக் குமார் உறவு வைத்திருந்தார் என்றும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளார். சுசித்ராவுக்கு மனநலம் சரியில்லை என்றும் அவர் தன்னை பற்றி சொல்லும் எதுவும் உண்மை இல்லை என கார்த்திக் குமார் தனிப்பட்ட முறையில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

சுச்சி லீக்ஸுக்கு யார் காரணம்?: ஒருநாள் இரவு தூங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென தனுஷின் உதவியாளர் போன் செய்து தன்னிடம் வெளியான புகைப்படங்கள் எல்லாம் மார்ஃப் செய்யப்பட்டது என ட்வீட் போட சொன்னார். நான் முடியாது என சொல்லிவிட்டேன். அதற்கு முன்னதாக சில நாட்களுக்கு முன்னர் கார்த்திக் குமார் என்னிடம் ட்விட்டர் பாஸ்வேர்ட் கேட்டார் என்றும் அதன் மூலமாகத்தான் போட்டோக்கள் எல்லாம் அவர்கள் பிராங்க் செய்யும் விதமாக வெளியிட்டு சுச்சி லீக்ஸ் என்கிற பிரச்சனையை கிளப்பினார்கள் எனக் கூறியுள்ளார்.

தங்கையுடன் உடலுறவு: எனக்கு அம்மா அப்பா இல்லை தங்கை மட்டுமே இருந்தார். கார்த்திக் குமாருடன் பிரச்சனை ஏற்பட்டு விலகிய நிலையில், ஒரு நாள் வீட்டுக்கு வந்த தங்கை கார்த்திக் குமாருடன் ஒன் நைட் ஸ்டாண்ட் செய்ததாக கூறினார். அவர் என்ன சொல்கிறார் என்றே அப்போது எனக்கு புரியவில்லை. இப்பவும் டச்சில் இருக்குறியா எனக் கேட்டேன். அதற்கு ஆமாம், அவர் என் கிளையன்ட் எனக் கூறினார். அதன் பின்னர் தங்கையுடன் பேசுவதையும் நிறுத்தி விட்டேன் என பகீர் கிளப்பி உள்ளார்.

போலீசார் விசாரணை: சுச்சி லீக்ஸ் விவகாரத்தால் பெரிய பிரச்சனை வெடித்தது. என்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் என கார்த்திக் குமார் சொன்ன வீடியோவில் பார்த்தால் அவர் தான் 48 மணி நேரம் பார்ட்டி செய்து டயர்ட்டாக இருந்திருப்பார் என்பது தெரியும். அது தொடர்பாக பொம்மை போலீஸ் வருவார்கள் பயப்படாத என்றார் கார்த்திக். ஆனால், நிஜ போலீஸ் வந்து என்னுடைய கேட்ஜட்களை பெற்றுச் சென்றனர். கமிஷனர் அலுவலகத்தில் கார்த்திக் குமார் மற்றும் தனுஷ் குறித்து புகார் கொடுத்தேன். அந்த விவரம் வெளியே வந்ததும் 5 ஆண்டுகள் எந்த வேலையையும் செய்ய விடாமல் என்னை வச்சு செய்தார்கள் எனக் கூறியுள்ளார் சுசித்ரா. பாடகி சுசித்ரா தொடர்ந்து பல பிரபலங்கள் குறித்து பேசி வரும் நிலையில், திரிஷா, தனுஷ் உள்ளிட்ட எந்தவொரு பிரபலமும் அவருக்கு எதிரான கருத்துக்களை பதிவிடாமல் இருப்பது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X