Don't Miss!
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Lifestyle ஆண்களே! அனைத்து பெண்களுக்கும் உங்கள பிடிக்கணுமா? அப்ப சாணக்கியர் சொல்லும் இந்த 6 குணங்களை வளர்த்துக்கோங்க!
- News தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு 69.46%.. தருமபுரியில் தான் அதிகம்.. மத்திய சென்னையில் மோசம்! முழு தகவல்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சுசிலீக்ஸில் புது டுவிஸ்ட்: சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு மட்டும் அல்ல இமெயில்களும்...
சென்னை: தனது ட்விட்டர் கணக்கை ஹேக் செய்து ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாடகி சுசித்ரா போலீசில் புகார் அளித்துள்ளார்.
பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் தனுஷ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தனது ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டதாக சுசித்ரா தெரிவித்தார். #suchileaks என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது. இந்நிலையில் சுசித்ரா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
சுசித்ரா
மார்ச் மாதம் 2ம் தேதி யாரோ என் ட்விட்டர் கணக்கை(@suchitrakarthik) ஹேக் செய்து திரையுலக பிரபலங்களின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் கமெண்ட்டுகளை போட்டனர்.
மிரட்டல்
திரையுலக பிரபலங்களின் மேலும் பல புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடப்போவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டது. அப்போது எனக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்ததால் ட்விட்டர் இந்தியா தலைவரை அணுகி என் ட்விட்டர் கணக்கை என் கணவர் கார்த்திக் குமார் முடக்கினார்.
ட்விட்டர்
ட்விட்டரில் என் பெயரில் 40-50 போலி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளது. அவை அனைத்திலும் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இமெயில்
ட்விட்டர் கணக்கு போக என்னுடைய இமெயில்களும் ஹேக் செய்யப்பட்டது. அவற்றில் இருந்து திரையுலக பிரபலம் ஒருவருக்கு அசிங்கமான இமெயில்கள் சென்றுள்ளன. இத்தனைக்கும் காரணமானவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று சுசித்ரா தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.