Don't Miss!
- News வாய்ப்பு மறுத்த பாஜக.. தொகுதி மக்களுக்கு 'வருண் காந்தி' உணர்ச்சி பொங்க கடிதம்! உ.பியில் சலசலப்பு
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
திடீர் நெஞ்சுவலி.. பிரபல இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி.. ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தகவல்!
கொச்சி: மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து பிரபல இயக்குனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கொரோனா காலகட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்டதில் சினிமாதுறையும் ஒன்று.
இதனால் கோடிகளை தங்கள் படங்களில் போட்டு முடக்கி வைத்திருந்த தயாரிப்பாளர்கள் கவலை அடைந்தனர்.
ஓடிடி தளங்கள்
பின்னர் சில தயாரிப்பாளர்கள் தங்க படங்களை ஓடிடி தளங்களில் வெளியிட முடிவு செய்தனர். அதன்படி சில படங்கள் ஓடிடியில் வெளியாகின. அதில் ஒரு சில படங்கள் வெற்றி பெற்றன. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உட்பட அனைத்து மொழி படங்களுக்குமே ஓடிடியில் வெளியிடப்பட்டன.
சூஃபியும் சுஜாதாயும்
அதன்படி ஓடிடியில் வெளியான முதல் மலையாள படம், சூஃபியும் சுஜாதாயும். கடந்த ஜூலை மாதம் அமேசானில் இந்தப் படம் வெளியானது. இதில் ஜெயசூர்யா, அதிதி ராவ் ஹைதாரி, தேவ் மோகன், சித்திக் உட்பட பலர் நடித்திருந்தனர். இதை இயக்கியவர் நரனிபுழா ஷாநவாஸ். இந்தப் படம் அதிகம் கவனிக்கப்படவில்லை.
ஸ்கிரிப்ட் வேலை
இந்நிலையில், ஷாநவாஸ் தனது அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலையை ஈடுபட்டு வந்தார். இதற்காக அட்டப்பாடி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஷாநவாஸுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவருடன் இருந்தவர்கள்,
கோயமுத்தூரில் உள்ள கே.ஜி. மருத்துவமனையில் சேர்த்தனர்.
செயற்கை சுவாசக்கருவி
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செயற்கை சுவாசக் கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மலையாள
திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
அடக்கன்றாவியே.. ஆடையணியாமல் ஹோலி கொண்டாடிய கார்த்தி பட ஹீரோயின்.. பார்வதியா நடிச்சிட்டு இப்படியா?
-
விசித்ரா பாதிதான் சொல்லி இருக்காங்க..கவுண்டமணி அப்படிப்பட்ட ஆளுதான்.. வலைப்பேச்சு அந்தனன் பேட்டி!
-
கணவனுக்கும் மனைவிக்கும் இதுல கூட போட்டியா?.. ராம்சரண் - உபாசனா சொத்து மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா?