Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
திடீர் நெஞ்சுவலி.. பிரபல இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி.. ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தகவல்!
கொச்சி: மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து பிரபல இயக்குனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கொரோனா காலகட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்டதில் சினிமாதுறையும் ஒன்று.
இதனால் கோடிகளை தங்கள் படங்களில் போட்டு முடக்கி வைத்திருந்த தயாரிப்பாளர்கள் கவலை அடைந்தனர்.
ஓடிடி தளங்கள்
பின்னர் சில தயாரிப்பாளர்கள் தங்க படங்களை ஓடிடி தளங்களில் வெளியிட முடிவு செய்தனர். அதன்படி சில படங்கள் ஓடிடியில் வெளியாகின. அதில் ஒரு சில படங்கள் வெற்றி பெற்றன. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உட்பட அனைத்து மொழி படங்களுக்குமே ஓடிடியில் வெளியிடப்பட்டன.
சூஃபியும் சுஜாதாயும்
அதன்படி ஓடிடியில் வெளியான முதல் மலையாள படம், சூஃபியும் சுஜாதாயும். கடந்த ஜூலை மாதம் அமேசானில் இந்தப் படம் வெளியானது. இதில் ஜெயசூர்யா, அதிதி ராவ் ஹைதாரி, தேவ் மோகன், சித்திக் உட்பட பலர் நடித்திருந்தனர். இதை இயக்கியவர் நரனிபுழா ஷாநவாஸ். இந்தப் படம் அதிகம் கவனிக்கப்படவில்லை.
ஸ்கிரிப்ட் வேலை
இந்நிலையில், ஷாநவாஸ் தனது அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலையை ஈடுபட்டு வந்தார். இதற்காக அட்டப்பாடி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஷாநவாஸுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவருடன் இருந்தவர்கள்,
கோயமுத்தூரில் உள்ள கே.ஜி. மருத்துவமனையில் சேர்த்தனர்.
செயற்கை சுவாசக்கருவி
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செயற்கை சுவாசக் கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மலையாள
திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.