Don't Miss!
- Automobiles இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- News அமெரிக்காவின் வீழ்ச்சி ஆரம்பம்.. டாலருக்கு கூட்டாக ஆப்பு வைத்த சீனா - ரஷ்யா.. உலக அரசியலே ஆடுதே!
- Technology WhatsApp-க்கு இன்டர்நெட் வேண்டாம்.. ஆஃப்லைனில் போட்டோ, வீடியோ ஷேரிங்.. புதிய பீச்சர் வருது.. பர்மிஷன் போதும்!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
காவிரி விவகாரம் பத்தி நான் ஒண்ணுமே சொல்லலயே..! - சுகாசினி
காவிரி பிரச்சினையில் கர்நாடகத்துக்கு ஆதரவாக நான் கருத்து தெரிவிக்கவில்லை என்று நடிகை சுகாசினி விளக்கம் அளித்துள்ளார்.
காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்துக்கு செப்.6-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மண்டியா, மைசூரு, பெங்களூரில் கன்னட அமைப்புகள், விவசாய சங்கங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.
காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதை உடனடியாக நிறுத்த கோரி வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடந்தது. தமிழ் நாளிதழ்கள் கொளுத்தப்பட்டன. தமிழக வாகனங்கள் தடுக்கப்பட்டன.
இந்நிலையில் காவிரி விவகாரத்தில் நடிகை சுஹாசினி கர்நாடகத்துக்கு ஆதரவான நிலை எடுத்துள்ளதாக வாட்சப்பில் தகவல்கள் பரவின.
இந்நிலையில் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விளக்கம்: "காவிரிப் பிரச்சினை தொடர்பாக நான் கருத்து தெரிவித்ததாக தவறான பதிவு ஒன்று ட்வீட்டாகவும் வாட்சப்பிலும் வலம் வருகிறது. அது தவறானது. பொய். எனக்கும் அதற்கும் தொடர்பு கிடையாது. நான் வெளியூரில் இருக்கிறேன். காவிரி விவகாரம் தொடர்பாக எந்தவொரு சமூக வலைத்தளத்திலும் நான் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. எனவே அதுபோன்ற பதிவுகளை உதாசீனப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்."