Don't Miss!
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நான் தற்கொலைக்கு முயன்றேனா?: நித்யா மேனன் பட இயக்குனர்
மும்பை: தான் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான செய்திகள் குறித்து இயக்குனர் ராஜசிம்ஹா விளக்கம் அளித்துள்ளார்.
அனுஷ்கா நடித்த ருத்ரமாதேவி படத்திற்கு வசனம் எழுதியவர் ராஜசிம்ஹா. சந்தீப் கிஷன், நித்யா மேனனை வைத்து ஒக்க அம்மாயி தப்ப என்ற படத்தை இயக்கியவர்.
இந்நிலையில் அவர் மும்பையில் தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளியாகின.
தற்கொலை முயற்சி
வேலை இல்லாமல் மனஅழுத்தத்தால் அவதிப்பட்டு வந்த ராஜசிம்ஹா மும்பை சென்ற இடத்தில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளியாகின. அவர் மயங்கிக் கிடந்த புகைப்படமும் வெளியானது.
ராஜசிம்ஹா
தான் தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை என்று ராஜசிம்ஹா விளக்கம் அளித்துள்ளார். நான் தற்போது நலமாக இருக்கிறேன். உடல்நலக்குறைவால் மயக்கம் அடைந்துவிட்டேன் அவ்வளவு தான் என்கிறார் ராஜசிம்ஹா.
நன்றி
எனக்கு சர்க்கரை வியாதி உள்ளது. என் மீது பாசம் வைத்துள்ள அனைவருக்கும் நன்றி. இன்னும் மூன்று நாட்களில் நான் ஹைதராபாத்துக்கு திரும்பிவிடுவேன். அதன் பிறகு உங்களை எல்லாம் சந்திக்கிறேன் என்று ராஜசிம்ஹா தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர்
ராஜசிம்ஹா ருத்ரமா தேவி உள்பட 40 படங்களில் எழுத்தாளராக பணியாற்றியுள்ளார். அண்மையில் கன்னட திரையுலகிலும் எழுத்தாளராக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.