twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முழு போதையில் சுஜா போட்ட ஆட்டம்!

    By Staff
    |

    சென்னை:புத்தாண்டையொட்டி சென்னை அருகே கேளம்பாக்கம் கடற்கரையில்,வாலிபர்களுடன் குடிபோதையில், வாத்தியார் படத்தில் குத்தாட்டம் ஆடிய நடிகைசுஜா, கெட்ட ஆட்டம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    நேற்று முன்தினம் இரவு சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் புத்தாண்டுக்கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தன. மெரீனா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரைஉள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் ஜன சமுத்திரம் அலை கடலை அரளச் செய்தது.

    சென்னை அருகே உள்ள கேளம்பாக்கம் கடற்கரையிலும் ஏராளமான காதல்ஜோடிகள், தம்பதியினர் ஜோடி ஜோடியாக அமர்க்களப்படுத்தினர். இந்த நிலையில்நள்ளிரவைத் தாண்டிய நேரத்தில், இப்பகுதிக்கு நடிகை சுஜா சில வாலிபர்களுடன்காரில் வந்து இறங்கினார்.

    கடற்கரை மணலில் கால் போன போக்கில் கொஞ்ச நேரம் நடந்து திரிந்த அவர்கள்பின்னர் குத்தாட்டத்தில் குதித்தனர். அத்தனை பேரும் குடிபோதையில் இருந்ததாககூறப்படுகிறது.

    காரில் இருந்த டேப்பில் பாடலை சப்தமாக வைத்துக் கொண்டு அவர்கள் போட்டஆட்டம் கடற்கரையில் இருந்தவர்களை மிரளச் செய்தது. அரைகுறை உடையில் சுஜாகும் குத்தாட்டம் போட்டார்.

    இகையடுத்துசிலர் போலீஸாருக்குத் தகவல் தரவே அவர்கள் விரைந்து வந்து சுஜாஅண்ட் கோவை எச்சரித்து காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

    சுஜாவுடன் வந்தவர்கள் இளம் தொழிலதிபர்கள் என்று கூறப்படுகிறது.புத்தாண்டுக்காக சுஜாவை அவர்கள் துட்டு கொடுத்து என்கேஜ் செய்து மஜாவுக்காககூட்டி வந்ததாக கூறப்படுகிறது.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X