ச்ச்சீ, இந்த சுஜா வருணிக்கு ஜூலி எவ்வளவோ பரவாயில்லையேப்பா!
சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு வந்துள்ள சுஜா வருணி பேசினாலே பார்வையாளர்கள் கடுப்பாகிறார்கள்.
பிக் பாஸ் வீட்டிற்கு வைல்டு கார்டு மூலம் வந்தவர் நடிகை சுஜா வருணி. சினிமா துறையில் பல ஆண்டுகளாக இருந்தும் அங்கீகாரம் இல்லாமல் இருக்கிறார்.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு வந்துள்ளார்.

வையாபுரி
பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததில் இருந்து ஒரே கேள்வியை திருப்பித் திருப்பி கேட்கிறார். வையாபுரி ஏன் எனக்கு பின்னால் கட்டிப்புடி கட்டிப்புடிடா என்று பாடினார் என்று கேட்கிறார் சுஜா.

விளக்கம்
சுஜாவின் கேள்விக்கு பலர் விளக்கம் அளித்தும் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்து கடுப்பேற்றுகிறார். கொடுத்த காசுக்கு நடிக்க வேண்டும் என்று நடிக்கிறார் சுஜா என்று நெட்டிசன்கள் விளாசுகிறார்கள்.

சண்டை
சும்மா இருக்காமல் பிந்து, ரைசா, வையாபுரி என்று ஒவ்வொருத்தரிடமாக சண்டை போடுகிறார் சுஜா. அவர் சண்டை போடுவது செயற்கையாகவும், எரிச்சலாகவும் உள்ளது.

ஜூலி
சுஜா நடந்து கொள்வதை பார்த்தால் ஜூலி எவ்வளவோ பரவாயில்லை என்கிறார்கள் பார்வையாளர்கள். பிக் பாஸ் வேண்டும் என்றே சுஜாவை அழைத்து வந்துள்ளார் போல.
கடுப்பு
சுஜா வருணி ஓவரா பண்ணுதே, கடுப்பாக உள்ளது என்று ஒருவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











