Don't Miss!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- News சொத்துக்குவிப்பு வழக்கு இன்று விசாரணை.. அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கோர்ட்டில் ஆஜர்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'ஆண் தேவதை'க்காக ரிஸ்க் எடுத்த சுஜா வருணி: அவரை திட்டாதீங்க மக்களே
Recommended Video
சென்னை: ஆண் தேவதை படத்திற்காக ரிஸ்க் எடுத்துள்ளார் சுஜா வருணி.
பதின் வயதில் இருந்து படங்களில் நடித்து வருகிறார் சுஜா வருணி. இருப்பினும் நல்ல பிரேக் கிடைக்காமல் உள்ளார். இந்நிலையில் தான் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.
படங்களில் அவரை கவனிக்கத் தவறியவர்கள் கூட பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து என்ன ஒரு தைரியமான பொண்ணு என்று பாராட்டினார்கள்.
பட வாய்ப்பு
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புகள் வந்தாலும் தனக்கு தகுந்த கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார் சுஜா வருணி. தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள ஆண் தேவதை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சுஜா. அந்த கதாபாத்திரம் செய்யும் வேலைகளை பார்த்தால் ரசிகர்களுக்கு நிச்சயம் கோபம் வருமாம்.
சுஜா வருணி
ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து கை நிறைய சம்பளம் வாங்குபவராக நடித்துள்ளார் சுஜா வருணி. இதில் கோபப்பட என்ன உள்ளது என்று நினைக்கலாம். கை நிறைய சம்பாதித்தாலும் வெட்டி பந்தா பண்ண கடன் வாங்கி வாழும் பெண்ணாக நடித்துள்ளாராம் சுஜா வருணி. அப்படிப்பட்ட பெண்ணை பார்த்தால் கோபம் வரத் தானே செய்யும். ஆண் தேவதை படம் வரும் 12ம் தேதி ரிலீஸாகிறது.
ஆண் தேவதை
இயக்குனர் தாமிரா சுஜா வருணிக்கு போன் செய்து ஆண் தேவதை படத்தின் கதையை சொன்னதுமே அவருக்கு பிடித்துவிட்டதாம். தாமிராவின் ரெட்டசுழி படத்தில் அஞ்சலி கதாபாத்திரத்தை பார்த்துவிட்டு நமக்கு இப்படி ஒரு கதாபாத்திரம் எப்பொழுது கிடைக்கும் என்று ஏங்கியிருக்கிறார் சுஜா. அந்த ஏக்கம் தற்போது தீர்ந்துள்ளது.
வாழக் கூடாது
ஒரு பெண் எப்படி வாழக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக நான் நடித்துள்ளேன். என்னை திட்டாமல் படத்தை பாருங்க என்று அன்பு கோரிக்கை விடுத்துள்ளார் சுஜா வருணி. நெகட்டிவ் கதாபாத்திரம் என்றாலும் நடிக்க ஸ்கோப் இருந்ததால் துணிந்து ரிஸ்க் எடுத்திருக்கிறார் சுஜா என்பது குறிப்பிடத்தக்கது.