Don't Miss!
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
கலந்து பேசித்தான் கல்யாணத்தை ரத்து செய்தோம் - சுஜிபாலா
உண்மை என்ற படத்தில் நடித்த போது அந்தப் பட இயக்குநர் ரவிக்குமாருக்கும் சுஜிபாலாவுக்கும் காதல் மலர்ந்து, பெற்றோர் சம்மதத்துடன் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது.
ஆனால் இருவருக்கும் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்துவிட்டனர். திருமணம் முறிந்துவிட்டது.
இதுகுறித்து மீடியாக்காரர்களை தானே அழைத்து விளக்கம் சொல்லி வருகிறார்கள் சுஜிபாலாவும் ரவிக்குமாரும். நேற்று முழுக்க ரவிக்குமார் முறை போலிருக்கிறது. இன்று சுஜிபாலா தன் பக்க விளக்கத்தை கூறினார்.
அவர் கூறுகையில், "நானும் ரவிக்குமாரும் காதலித்தோம், நிச்சயமும் செய்து கொண்டோம். ஆனால் சின்னச்சின்ன விஷயங்களில் கூட எங்களால் ஒத்துப் போக முடியவில்லை. இப்போதே இப்படி என்றால், எதிர்காலத்தில் எப்படி இருக்குமோ என்ற யோசனையும் பயமும்தான் இந்த திருமணம் நிற்கக் காரணம்.
ஆனால் தனிப்பட்ட வாழ்க்கை வேறு, தொழில் வேறு. இதே ரவிக்குமார் இனி படம் எடுத்தாலும் நடிப்பேன். இந்தப் படத்தில் கூட சில காட்சிகள் பாக்கி உள்ளன. நடித்துக் கொடுக்கத்தான் போகிறேன்.
இனி திருமணம் பற்றி யோசிக்கக் கூட விரும்பவில்லை," என்றார்.