twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மீண்டும் வந்தார் சுமன் ரங்கநாதன்.. “கபடதாரி“யில் ரீ என்ட்ரி.. பூஜா குமாருக்கு பதிலாக!

    |

    சென்னை : கபடதாரி படத்தில் பூஜாகுமாருக்கு பதிலாக சுமன் ரங்கநாதன் நடிக்க உள்ளார்.

    நடிகர் சிபிராஜ் நடிப்பில் கன்னட சினிமாவை கலக்கிய "காவலுதாரி" படத்தின் தமிழ் பதிப்பு "கபடதாரி" என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. இப்படத்தில் முக்கிய வேடம் ஒன்றிற்காக நடிகை பூஜா குமார் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

    Suman Ranganathan replaces Pooja Kumar in Kabadadaari“

    இப்போது அவருக்கு பதிலாக தென்னிந்திய சினிமா பிரபலமான சுமன் ரங்கநாதன் நடிக்கவுள்ளார். படத்தில் பல திருப்பங்கள் கொண்டதாக கதைக்கு பெரும் முக்கியத்துவம் மிக்க கதாப்பாத்திரமாக இவரது கதாப்பாத்திரம் உள்ளது. கன்னட பதிப்பில் இவரே இந்தக் கதாப்பாத்திரத்தை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சுமன் ரங்கநாதன் 90களில் தென்னிந்திய முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து, மிகவும் புகழ்பெற்ற ஹீரோயினாக விளங்கியவர். நடிகர் விஜய்காந்துடன் இணைந்து நடித்த "மாநகர காவல்", நடிகர் அர்ஜீனுடன் இணைந்து நடித்த "மேட்டுபட்டி" படங்கள் குறிப்பிடத்தகுந்தவை. சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த "ஆரம்பம்" படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஈர்த்தார்.

    Suman Ranganathan replaces Pooja Kumar in Kabadadaari“

    கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் மற்றும் விநியோகஸ்தர் நிர்வாக தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியதாவது, நடிகை சுமன் ரங்கநாதன் எங்கள் படத்தில் இணைந்தது மிகுந்த மகிழ்ச்சி. முன்னதாக நாங்கள் நடிகை பூஜா குமாரை இந்த கதாப்பாத்திரத்திற்காக தேர்வு செய்திருந்தோம் அவரும் இக்கதாப்பாத்திரத்திற்கு மிகப்பொருத்தமானவரே, ஆனால் அவரின் அவசரமான அமெரிக்க பயணத்தால் அவர் இப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. தற்போது கன்னட பதிப்பில் இந்தக்கதாப்பாத்திரத்தை மிக சிறப்பாக கையாண்ட சுமன் ரங்கநாதன் எங்களுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி.

    சுமன் ரங்கநாதன் வெகு அற்புதமான நடிப்பால் இந்த கதாப்பாத்திரத்தில் ரசிகர் மனங்களை வென்றிருந்தார். தமிழிலும் அவர் கண்டிப்பாக ரசிகர்களை ஈர்ப்பார். தமிழ் ரசிகர்களுக்கு ஏற்கனவே அவர் அறிமுகமானவர் என்பது கூடுதல் பலம்.

    Suman Ranganathan replaces Pooja Kumar in Kabadadaari“

    தமிழில் சில குறிப்பிடத்தகுந்த வெற்றிபடங்களுக்கு பிறகு அவர் கன்னடத்தில் பிஸியாகிவிட்டார். இப்போது தமிழுக்கு அவரை அழைத்து வந்தததில் எங்களுக்கு மகிழ்ச்சி. தமிழில் அவர் பங்குபெறும் பகுதியின் படப்பிடிப்பு முழுதாக முடிந்து விட்டது. சென்னையில் மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்ட செட்டில் அவர் பங்குபெற்ற பாடல் ஒன்றும் படமாக்கப்பட்டுள்ளது.

    Suman Ranganathan replaces Pooja Kumar in Kabadadaari“

    இத்திரைப்படத்தில் ஜான் மகேந்திரன் அவர்களுடன் இணைந்து தனஞ்செயன் தழுவிய திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியுள்ளார். இன்னும் 20 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட வேண்டியுள்ளது.

    மாயநதி போல ஒரு திரைப்படம் மீண்டும் வேண்டும் ரசிகர்கள் கருத்துமாயநதி போல ஒரு திரைப்படம் மீண்டும் வேண்டும் ரசிகர்கள் கருத்து

    லலிதா தனஞ்செயன் இத்திரைப்படத்தை தயாரிக்கிறார். சிபிராஜ் நாயகனாக நடிக்க நந்திதா ஸ்வேதா நாயகியாக நடிக்கிறார். நாசர், ஜெயப்பிரகாஷ், ஜெ.சதீஷ் குமார் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். சைமன் கே. கிங் இசையமைக்கிறார். இறுதிகட்ட பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

    English summary
    Suman Ranganathan replaces Pooja Kumar in "Kabadadaari“
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X