Don't Miss!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நடிகையை திருமணம் செய்து ஓராண்டுக்குள் சுமங்கலி டிவி சீரியல் நடிகர் தற்கொலை
ஹைதராபாத்: சுமங்கலி தொலைக்காட்சி தொடரில் ஹீரோவாக நடித்து வந்த பிரதீப் ஹைதராபாத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சின்னத்திரை பிரபலங்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அண்மையில் சின்னத்திரை நடிகை நந்தினியின் கணவர் கார்த்திக் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் மேலும் ஒரு சின்னத்திரை பிரபலம் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சுமங்கலி
பிரபல தொலைக்காட்சி சேனலில் நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் சுமங்கலி. இந்த தொடரின் ஹீரோவாக நடித்து வந்தவர் பிரதீப்.
தற்கொலை
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தின் புப்பலகுடா பகுதியில் உள்ள தனது வீட்டில் பிரதீப் இன்று காலை 4 மணிக்கு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குடும்ப பிரச்சனை
குடும்ப பிரச்சனையால் பிரதீப் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமணம்
பிரதீப்புக்கும், பாசமலர் தொடரில் அவருடன் நடித்த பவானி ரெட்டிக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பிரதீப்பின் தற்கொலை விவரம் அறிந்து அவருடன் பணியாற்றிவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.