Don't Miss!
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் உங்களை நரக வாசலுக்கு அழைத்து செல்வார்களாம்..இவங்ககிட்ட விலகியே இருங்க!
- News ராகுல் முதல் டிகே சிவக்குமார் தம்பி வரை.. 2ம் கட்ட தேர்தலில் விஐபி வேட்பாளர்கள் இவர்கள் தான்!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சன் தொலைக்காட்சி மூத்த ஒளிப்பதிவாளர் பெ.செந்தில்குமார் மறைவு
சென்னை: உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான சன் தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாளர் செந்தில்குமார், (வயது 48 )இன்று (9/11/2019,)காலை 10 மணியளவில் இயற்கை எய்தினார்.
உயர் ரத்த அழுத்தத்தால் இரத்தக் குழாய்கள் வெடித்து, உயிருக்கு போராடி வந்த பி.செந்தில்குமார் சென்னை ராஜுவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் பலனின்றி இயற்கை எய்தினார் .அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் , உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரோடும் துக்கத்தை பகிர்ந்து கொள்கிறோம் .
சன் தொலைக்காட்சியின் மறைந்த ஒளிப்பதிவாளர் பி.செந்தில்குமார் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
வாழவேண்டிய வயதில், உடல் நலத்தில் உரிய கவனம் செலுத்தாததால் தொடர்ந்து நாம் நமது உறவுகளை- சக ஊடக நண்பர்களை இழந்து வருவது பெரும் வேதனையைத் தருகிறது.
செந்தில்குமாரின் மறைவால் வாடும் அவரது மனைவி மற்றும் இரண்டு சிறு பிள்ளைகளை நினைக்கும்போது பெரும் கவலை ஏற்படுகிறது. செந்தில்குமாரின் குடும்பத்தினருக்கு உதவ வேண்டியது நமது கடமை.
இந்த திடீர் மரணங்கள், நாம் நமது உடல் -மன நலன்களைப் பாதுகாக்க வேன்டியதை நமக்கு அழுத்தமாக உணர்த்தி விட்டு செல்கிறது. உணர்ந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.
செந்தில்குமாரின் உடல், நாளை (10/11/19) ஞாயிறு காலை 9 மணி வரை ,எண் 58, மூன்றாவது பிரதான சாலை, ஜெயராம் நகர், டான் பாஸ்கோ பள்ளி அருகில், கொளத்தூர், சென்னை-99, என்ற முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது .
செந்தில்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு பிலிமி பீட் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆத்மா அமைதியடைய ஆண்டவனை பிரார்த்திப்போம்.