Don't Miss!
- Automobiles இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!
- Lifestyle Today Rasi Palan 23 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப் பெரிய நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது...
- News கடலூர் பெண் கொலை பற்றி அவதூறு.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது போலீஸ் வழக்குப்பதிவு
- Sports ரஹானே தொடக்க வீரராக மாறியது ஏன்? சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் மாற்றம் வருகிறது.. மைக்கில் ஹஸி கருத்து
- Technology பட்ஜெட்ல பக்குவமா வாங்கலாம்.. ரூ.15000 விலைக்குள்.. பெஸ்ட் கேமரா.. பெர்ஃபார்மென்ஸ் Mobile.. எந்த மாடல்கள்?
- Finance ஓரே அறிவிப்பு, மொத்த முதலீட்டாளர்களுக்கும் ஹேப்பி..!! அம்பானி கொடுத்த டிவிடென்ட் சர்பரைஸ்..!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இதுல வடநாட்டுப் பேயா இருக்குமோ? குஜராத்தில் தொடங்கியது சுந்தர்.சியின் 'அரண்மனை 3' பட ஷூட்டிங்
சென்னை: 'அரண்மனை பட முன்றாம் பாகத்தின் ஷூட்டிங் குஜராத்தில் தொடங்கியுள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில் வினய், ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, சந்தானம், கோவை சரளா உட்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், அரண்மனை.
யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். பேய் படமான இது, கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியானது. இதையடுத்து இதன் இரண்டாம் பாகத்தை இயக்கினார்.
ஆர்யா ஹீரோ
இதில், த்ரிஷா, சித்தார்த், ஹன்சிகா, பூனம் பஜ்வா, சூரி உட்பட பலர் நடித்திருந்தனர். 2016 ஆம் ஆண்டு வெளியான இந்த படமும் பேசப்பட்டது. இதை சுந்தர். சியின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்நிலையில் இதன் மூன்றாம் பாகத்தை சுந்தர். சி இயக்குகிறார். இதில் ஹீரோவாக ஆர்யா நடிக்கிறார்.
ஆண்ட்ரியா
ஹீரோயின்களாக, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் நடிக்கின்றனர். இவர் தமிழில், அடங்கமறு, அயோக்யா படங்களில் நடித்தவர். மற்றும் விவேக், யோகிபாபு உட்பட பலர் நடிக்கின்றனர். முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் பேய் படம் இது. முந்தைய பாகத்துக்கும் மூன்றாம் பாகத்துக்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது என்று படக்குழுத் தெரிவித்திருந்தது.
ஆர்வமாக
இதில் நடிப்பது பற்றி நடிகை ராஷி கண்ணா கூறும்போது, 'அரண்மனை படத்தின் முதல் இரண்டு பாகங்களை பார்த்திருக்கிறேன். இதுபோன்ற ஒரு கதையில் நடிக்க எனக்கு ஆசை இருந்தது. இப்போது அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது' என்று கூறியிருந்தார்.
ராஜ்கோட்டில்
இந்நிலையில் இந்தப் படத்தின் ஷூட்டிங், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தொடங்கியுள்ளது. இதில் ஆர்யா கலந்து கொண்டுள்ளார். அங்கு 25 நாட்கள் படப்பிடிப்பு நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்துக்கு சத்யா இசை அமைக்கிறார். சன்பிக்சர்ஸ் தயாரிப்பதாகக் கூறப்பட்டது. இப்போது சுந்தர்.சியே தயாரிக்கிறார் என்று தெரிகிறது.
-
கும்முன்னு இருக்கன்னு சொல்லி பிரபல இயக்குநர் பின்னாடி புடிச்சிட்டாரு.. பகீர் கிளப்பிய நடிகை காயத்ரி!
-
நீயும் நானும் சேர்ந்து போகும் தூரமே.. நயன்தாராவை சும்மா வளைச்சு வளைச்சு ரசிக்கிறாரே விக்னேஷ் சிவன்!
-
Aadujeevitham: 25 நாட்கள்.. 150 கோடி ரூபாய் வசூல்.. ஆடு ஜீவிதம் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!