Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
கதாநாயகனாக சுந்தர் சி வில்லனாகும் ஜெய்… ஆர்வத்தை கூட்டும் கூட்டணி
சென்னை : சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கும் பட்டாம்பூச்சி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
படத்தின் இயக்குனர் பத்ரி பிரபல டிவி சீரியல் இயக்குனர் ஆவார். சன் டிவியில் பல ஹிட் சீரியல்களை இயக்கியவர்.
சுந்தர் சியுடன் பணியாற்றிய இவர் தற்போது சுந்தர் சி யை வைத்து பட்டாம்பூச்சி எனும் படத்தை இயக்கியுள்ளார். இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
“பட்டாம்பூச்சி“ படத்திற்காக சைக்கோ கொலைக்காரனாக மாறிய ஜெய்!
சுந்தர் சி - ஜெய் கூட்டணி
துணை கதாபாத்திரத்தில் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த நடிகர் ஜெய் பல படங்களில் தோன்றினாலும் அவருக்கு பெயரை வாங்கித் தந்த படம் சுப்ரமணியபுரம். கிராமத்தில் வாழும் வேலையில்லாமல் சுற்றும் வாலிபனாக நடித்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றார். அதன் பிறகு பல படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் அவர் எதிர்பார்த்த அளவுக்கு பெயர் கிடைக்காததால் தற்போது சில படங்களில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்து வருகிறார். இயக்குனர் சுந்தர் சி இவரோடு இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளார். சுந்தர் சி காமெடி படங்களை இயக்குவதில் வல்லமை பெற்றவர். குடும்பங்கள் சேர்ந்து பார்க்கும் படங்களை மட்டுமே இயக்குபவர். பல ஹிட் படங்களை தந்தவர். வடிவேலுவை வைத்து அவர் உருவாக்கிய பல கதாபாத்திரங்கள் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. ஜெய் மற்றும் சுந்தர் சி இணைந்து நடிக்கும் பட்டாம்பூச்சி படம் ஒரு திரில்லர் கதை களமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் பத்ரி
பட்டாம்பூச்சி திரைப்படத்தின் இயக்குனர் பத்ரி. இவர் ஒரு பிரபல சீரியல் இயக்குனர். சன் டிவியில் வந்த பல ஹிட் சீரியல்களை இயக்கியவர். இவர் சுந்தர் சி இடம் அசோசியேட் டைரக்டராகவும், அவரது பல படங்களுக்கு வசன கர்த்தாவாகவும் இருந்திருக்கிறார். இவர் இதற்கு முன்னர் இரண்டு திரைப்படங்கள் இயக்கியுள்ளார். வீராப்பு மற்றும் தில்லு முல்லு திரைப்படங்கள் இவர் இயக்கியவை. வீராப்பு படத்தில் கதாநாயகனாக சுந்தர் சி நடிக்க, தில்லு முல்லு படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்து இருந்தார். தற்போது இவர் இரண்டாவது முறையாக சுந்தர் சி யை வைத்து இயக்கும் இந்தப் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதிரும் புதிரும்
பத்ரி இயக்கும் பட்டாம்பூச்சி திரைப்படத்தில் சுந்தர் சி கதாநாயகனாக நடிக்க ஜெய் வில்லனாக நடிக்கிறார். நடிகர் ஜெய் முதன்முறையாக வில்லனாக நடிக்கும் இந்தப் படம் பீரியட் படமாக எடுக்கப் பட்டுள்ளது. 1980-களில் நடக்கும் இந்த கதை ஒரு சீரியல் கில்லருக்கும் போலீசுக்கும் மத்தியில் நடைபெறும் எலி பூனை விளையாட்டு போல கதை அமைக்கப்பட்டுள்ளது. சீரியல் கில்லர் ஆக ஜெய் மிரட்ட அவரை துரத்தும் போலீசாக சுந்தர் சி விரட்டுகிறார். இதற்கு முன்னர் ஜெய் நடித்து சூப்பர் ஹிட்டான சுப்பிரமணியபுரம் இதேபோல 80 களில் நடந்த கதை என்பதால் இந்தப் படமும் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்டாம்பூச்சி ரிலீஸ் தேதி
பட்டாம்பூச்சி திரைப்படத்தில் சுந்தர் சி மற்றும் ஜெய் தவிர வேறு சில முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். சிங்கம் புலி படத்தில் நடித்த ஹனிரோஸ் இதில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவரோடு இமான் அண்ணாச்சி மற்றும் மானசி நடித்துள்ளனர். நடிகை குஷ்பு இந்த படத்தை தயாரித்துள்ளார். நவநீத் சுந்தர் இதற்கு இசை அமைத்துள்ளார். பட்டாம்பூச்சி திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் ரிலீஸாக இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் அது தள்ளிவைக்கப்பட்டது. இதுவரை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும் மே மாத இறுதியில் இந்த படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!