Don't Miss!
- News இந்தியக் குடியுரிமையைப் போராடிப் பெற்ற பெண்! நிஜத்தில் ஒரு ‘சர்க்கார்’ நாயகி!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சுந்தர்.சி நடிப்பில் டிசம்பர் 6 வெளியாக இருக்கிறது இருட்டு
சென்னை : சுந்தர் .சி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் தான் இருட்டு .முழுக்க முழுக்க மனதை பதற வைக்கும் பேய் படமாக உருவாகி இருக்கிறது இருட்டு படம் .இந்த படத்தின் முன்னோட்டம் வெளியாகி மிக பெரிய எதிர்பார்பை ரசிகர்கள் மனதில் ஏற்படுத்தியது .
சுந்தர்.சி கடைசியாக முத்தின கத்திரிக்காய் படத்தில் நடித்திருந்தார் .இந்த படத்திற்கு பிறகு இயக்குனராக பிஸியான சுந்தர் .சி வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை .சுந்தர்.சி தமிழ் சினிமாவின் சிறந்ந இயக்குனர்களில் ஒருவர் .இவர் பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் .
சுந்தர்.சி 2006ல் வெளியான தலைநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் .அந்த படம் பலரிடத்தில் நல்ல பாராட்டை பெற்றது .தலை நகரம் படத்திற்க்கு பிறகு சுந்தர்.சிக்கு தொடர் வாய்ப்புகள் கிடைத்தது .அதையடுத்து வீராப்பு ,சண்டை ,ஆயுதம் செய்வோம்,பெருமாள்,தீ,ஐந்தாம் படை , குரு சிஷ்யன், வாடா, நகரம் மறுப்பக்கம்,முரட்டு காலை ,அரண்மனை மற்றும் அரண்மனை 2 ,முத்தின கத்திரிக்காய் ஆகிய படங்களில் நடித்தார் .இதில் பல படங்கள் சுந்தர்.சிக்கு வெற்றி படங்களாகவே அமைந்தது ,சுந்தர் .சி நடிக்கும் சமயங்களில் சரியாக 2006 முதல் 2011 வரை அவர் படமே இயக்காமல் முழுக்க முழுக்க நடித்தே வந்தார்.
அதற்கு பிறகு கலகலப்பு மற்றும் அதன் இரண்டாம் பாகம், அரண்மனை மற்றும் அதன் இரண்டாம் பாகம் ,வந்தா ராஜாவாதான் வருவேன் ,ஆம்பள மற்றும் ஆக்சன் என மீண்டும் இயக்கத்தில் பிஸியாகி போன சுந்தர்.சி தற்போது மீண்டும் ஒரு படத்தில முழு நீள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .
இயக்குனர் மணிவண்ணன் செய்த பல சாதனைகள் எப்படி நாம் மறக்க முடியாதோ அது போல் சுந்தர் சியும் பல பல வெரைய்ட்டி கதைகள் செய்து பட்டய கிளப்பிக்கிறார். நடிப்பு , இயக்கம் என்று எல்லா விதத்திலும் சாதிக்க வாழ்த்துவோம் .