Don't Miss!
- Technology வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!
- News எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க துடித்த காங்கிரஸ் - பிரதமர் மோடி கடும் ‛அட்டாக்’
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சுந்தர்.சி நடிப்பில் டிசம்பர் 6 வெளியாக இருக்கிறது இருட்டு
சென்னை : சுந்தர் .சி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் தான் இருட்டு .முழுக்க முழுக்க மனதை பதற வைக்கும் பேய் படமாக உருவாகி இருக்கிறது இருட்டு படம் .இந்த படத்தின் முன்னோட்டம் வெளியாகி மிக பெரிய எதிர்பார்பை ரசிகர்கள் மனதில் ஏற்படுத்தியது .
சுந்தர்.சி கடைசியாக முத்தின கத்திரிக்காய் படத்தில் நடித்திருந்தார் .இந்த படத்திற்கு பிறகு இயக்குனராக பிஸியான சுந்தர் .சி வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை .சுந்தர்.சி தமிழ் சினிமாவின் சிறந்ந இயக்குனர்களில் ஒருவர் .இவர் பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் .
சுந்தர்.சி 2006ல் வெளியான தலைநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் .அந்த படம் பலரிடத்தில் நல்ல பாராட்டை பெற்றது .தலை நகரம் படத்திற்க்கு பிறகு சுந்தர்.சிக்கு தொடர் வாய்ப்புகள் கிடைத்தது .அதையடுத்து வீராப்பு ,சண்டை ,ஆயுதம் செய்வோம்,பெருமாள்,தீ,ஐந்தாம் படை , குரு சிஷ்யன், வாடா, நகரம் மறுப்பக்கம்,முரட்டு காலை ,அரண்மனை மற்றும் அரண்மனை 2 ,முத்தின கத்திரிக்காய் ஆகிய படங்களில் நடித்தார் .இதில் பல படங்கள் சுந்தர்.சிக்கு வெற்றி படங்களாகவே அமைந்தது ,சுந்தர் .சி நடிக்கும் சமயங்களில் சரியாக 2006 முதல் 2011 வரை அவர் படமே இயக்காமல் முழுக்க முழுக்க நடித்தே வந்தார்.
அதற்கு பிறகு கலகலப்பு மற்றும் அதன் இரண்டாம் பாகம், அரண்மனை மற்றும் அதன் இரண்டாம் பாகம் ,வந்தா ராஜாவாதான் வருவேன் ,ஆம்பள மற்றும் ஆக்சன் என மீண்டும் இயக்கத்தில் பிஸியாகி போன சுந்தர்.சி தற்போது மீண்டும் ஒரு படத்தில முழு நீள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .
இயக்குனர் மணிவண்ணன் செய்த பல சாதனைகள் எப்படி நாம் மறக்க முடியாதோ அது போல் சுந்தர் சியும் பல பல வெரைய்ட்டி கதைகள் செய்து பட்டய கிளப்பிக்கிறார். நடிப்பு , இயக்கம் என்று எல்லா விதத்திலும் சாதிக்க வாழ்த்துவோம் .