Just In
- 1 hr ago
திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்!
- 2 hrs ago
பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்!
- 2 hrs ago
'இது ஞாபகமிருக்கா கேர்ள்ஸ்?' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்!
- 2 hrs ago
ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை!
Don't Miss!
- Automobiles
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- News
மோசமடையும் உடல்நிலை... லாலு பிரசாத் யாதவை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற திட்டம்
- Lifestyle
இந்த கீரை ஆண்களின் ஆண்மை குறைபாட்டை போக்கி பாலுணர்ச்சியை அதிகரிக்குமாம்.. தெரியுமா?
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Finance
பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி
- Sports
அதெல்லாம் பண்ண முடியாது.. எதிரியாக இருந்தாலும் மரியாதை முக்கியம்.. கண்ணியம் காத்த ரஹானே!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரஜினி ரசிகர்களுக்கு பேட்ட மாதிரி சிம்பு ரசிகர்களுக்கு #VRV

சென்னை: சிம்புவுக்கு எது வருமோ அதை வைத்து படம் எடுத்துள்ளார் சுந்தர் சி.
சுந்தர் சி. இயக்கத்தில் சிம்பு, கேத்ரீன் தெரசா, மேகா ஆகாஷ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் படம் பிப்ரவரி மாதம் 1ம் தேதி ரிலீஸாகிறது.
இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சிம்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கெத்து
சொத்து தான் என் கெத்து, அம்மாவுக்கு அப்புறம் நான் தான்னு பல பேர் நினைக்கிறாங்க என்று ட்ரெய்லரில் சிம்பு பன்ச் வசனங்கள் பேசியுள்ளார். இப்படி பன்ச் மேல் பன்ச் விடுவது தான் சிம்புவின் கெத்து என்பது சுந்தர் சி.க்கு நன்கு புரிந்துள்ளது.

அமைதி
அமைதியாக அடங்கிப் போய் நடிப்பது எல்லாம் சிம்புவுக்கு செட்டாகாது. அது அவரின் ரசிகர்களுக்கும் பிடிக்காது என்பதை புரிந்து கொண்டு படத்தை இயக்கியுள்ளார் சுந்தர் சி. என்பது ட்ரெய்லர், பாடல்களை பார்த்தாலே தெரிகிறது.

ட்ரெய்லர்
நீங்க சின்சியரா லவ் பண்ணி வேணும்னு நினைக்கிற பொண்ணு வேற ஆளுக்கு கிடைக்குதே என்று ரோபோ ஷங்கர் சிம்புவை பார்த்து கூறியது வசனம் இல்லை உண்மை. ப்பா எவ்வளவு நாளாச்சு இந்த மாதிரி பன்ச் டயலாக் எல்லாம் பேசி என்று சிம்பு கூறுவதை கேட்டு ஆமாம் என்கிறார்கள் ரசிகர்கள். அவர் அந்த வசனத்தை சொல்வதே கியூட்டாக உள்ளது.

ட்ரீட்
பேட்ட படம் எப்படி ரஜினி ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைந்ததோ அதே போன்று வந்தா ராஜாவாதான் வருவேன் சிம்பு ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. வம்பு இழுத்தாதான் சிம்புவுக்கு கெத்து என்பதை இயக்குனர் புரிந்து வைத்துள்ளார்.